புதன், 11 ஜூலை, 2012

என்னவளே II

சிங்கார மயிலுக்கு சின்ன குயில் கூவுது
ஆலோபங்கிளியும் ஆரிராரோ கேட்குது

இலைச்சருகு சிறகாய் துள்ளி திரியுது
மின்மினி யிங்கே கண் சிமிட்டுது

மாய கண்ணனிங்கே மன்மதனாக
மாயவள் எங்கே மனக் கூட்டு குயிலே

ஊடல் சுகம் கற்க காதல் ஏற்க வந்தேன்
வசந்தனுமிங்கே...! வாயடைத்தே போனேன்

ஓரவிழி பார்வையில் ஓடைதனில் நீ நனைய
மாராப்பு போடுதம்மா வேனிற்கால தூரல்

தூண்டில் கண்கள் சரசம் பேசிட
தூவான மெங்கும் ஒலியொளி வீசுது

ஆடுமயிலே நீ சேலை உடுத்த வருணனும்
மறைந்தானம்மா வண்ண சேலை கொடுத்திட

நெருஞ்சிகளும் உன் பாதந்தனை  பதம் பார்க்க
கைகொடுத்தேன் உன் நெஞ்சில் இதமாய் வாழ

காதல் வழி தேட மோதல் விழி வீசுகிறாய்  அடடா...
இன்பசுகம் இன்பசுகம் என்னில் நீ பேசுகிறாய்

உடுக்கை இடைதனை காண உன்னுடுப்பை
களைகிறான் பாதகன் நெருஞ்சி சகோதரன்

மீண்டும் என்னில் மோதல் விழி வீசுகிறாய்
காதல் மொழி பேசி ஊடல்சுகம் கற்கிறாய்

அடடா... இன்பசுகம் நல்லினிய சுகம்

நாற் திசையவர் அறியா நான்மறை யறிந்தேன்
நடுநிசி உறக்கம் நான் மறந்தேன்

என்னில் எனையே நான் மறந்தேன்

***பிரகாஷ் சோனா***


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக