புதன், 5 செப்டம்பர், 2012

தமக்கையின் வலையகம்

http://chinaintamil.blogspot.hk/ இவ் வலையகத்தின் உள்ளடக்கங்களே பின் வருவன
 
 
தமிழ் தேசப் பறவை
சீனம் நோக்கி கூடமைத்தது ஏனோ
பெய்ஜிங் இசை நாடகங் கேட்கதானோ
சீனச்சுவட்டில் சீறிய பண்பேதுமுண்டோ

உண்டென்று கூறும் நீவீர்
அஃது கலாச்சார மொழிபற்று தானோ
வியப்பு!என்னில் மேலோங்குது வியப்பு
தேசமொழி மாறும்;நேசமொழி மாறுமோ
உம்மில் யாமின் பாசவழிதான் கலையுமோ

கலையா; அன்புக்கன்பே நிகர்.
நலமான ஊன்றிய இழப்பே வரலாறாகுங்பட்சம்
வரலாற் றாசானின் இழப்பும் நலமன்றோ
நலமென்கின் உம் எண்ணச் சுவட்டில்
அஃது வரலாறு ஆகட்டும்

வரலாறாகிய நட்புகள் புரிவதேயில்லை
நிரந்தரமாய் நட்பு பிரிவதுமில்லை
நட்பென்றும் அழகே; நட்பின் நலன் கருதுவதால்
நட்பு ஆழமான நினைவு பரிசு
நட்பு சுமையிறக்கும் வழிப்போக்கன்

சுமையிறக்கும் வழிப்போக்கன் வாரானோ
என்சுமை தீர்ப்பானோ;கண்ணில் நீர்வழிய
நெஞ்சில் நினைவுகளுடன், இன்னும்
சிலமாதம் தளிர் நடைபோட்டு கடப்பேனோ
உமைகாண சிலநினைவுளை விழைவேனோ

விழைந்த நினைவும் உன் பெயருச்சரிக்க
அஃதன்பென்று மனம் நகைக்கிறது-அங்கே
இளைப்பாற மனம் யாசிக்கிறது; அன்புமொழி
வாசிக்க,அழகாய் நலம் விசாரிக்க; மனம்
யாசிக்கிறது,குழந்தையாய் மனம் அடம்பிடிக்கிறது

அடம்பிடித்த மனம் அன்னை முந்தானையில்
ஒளிந்த நினைவுகளோடு வாழ்த்தையிட்டு நகர்கிறது
கவலை தோய்ந்த அந்தநொடி என்னுயிர்
நண்பன் நீதான் என்கிறது, கம்போடியா நகரத்து
கோயில் போல விசாலமாய்...

விசாலமான கம்போடியத்து அங்கோர்வாட் பல்
நூற்றாண்டை உள்வாங்கியது அஃதே பல்லுலக
பார்வைகளையும் உள்வாங்கியது, நாற்திசை
நாவாயில் ஓர்ரகழி மும்மண்டப ஐந்துகோவிலென
கலை பிரம்மாக்கள் அடங்கிய சொர்க்கபுரி

சொர்க்கபுரி வர்மனால் உச்சத்தை தொட
வாட்போ புத்தனும் சுவர்ணபூமி வாசுகியசுர
தேவரும் விழிதனில் ஆழப்பதிந்து பஹுரத்
ஆச்சிரியத்தில் புருவம் தூக்கி நிற்கிறது
மிச்சத்தை உம்எழுத்து தொட நினைக்கிறது

தொட நினைப்பது எதுவோ நீவீர்
அஃது உலகவரலாறு தானோ; நியான்
காலம் வசந்தகால புத்தாண்டாய் மாற
யானும் உங்களில் பகிர்கிறேன்
ஷின் நியான் குவாய்ல

ஷின் நியான் குவாய்ல சொல்லி
புன்னகையோடு நிறுத்தாமல் பாசவலையியில்
சிக்கிடலாமென நினைக்கிறேன்; கூறும்
தமக்கையே உம்பயணத்தில் எனக்கோர் இடமுண்டா
வெற்றிடத்தை நிரப்ப எனக்கோர் சிம்மாசனமுண்டா

சிம்மாசனம் எமக்கு உண்டென்பது நிச்சயம்
நீவீர் பழகிய புரிதலால் அஃது சாத்யம்

பிரகாஷ்சோனா(பெருவுடையான்

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யார் இவள்

  சாளர ஓரத்தின் இருக்கையில் ஏதோ பரபரப்பாக எழுதி கொண்டிருக்கிறான் அகில், எழுதி முடித்து மீண்டும் பரபரப்போடு எழுந்து கண்காணிப்பு ஆசிரியையிடம் வெற்று தாளை வாங்கி மீண்டும் பரபரப்போடு எழுதி கொண்டிருக்கிறான்.பள்ளி மணி அடிக்க விடை தாள்களை ஆசிரியை ஒன்றன் பின் ஒன்றாக வாங்கி கொண்டே அகிலை நெருங்க  அகிலும் பதட்டத்தோடு எழுதுகோலின் வேகத்தை கூட்டுகிறான் , ஆசிரியை அவன் அருகில் வந்ததும் ஒருவழியாக எழுதி முடித்த விடை தாள்களை கொடுத்து விட்டு தனது உடைமைகளை சரி பார்க்க..... மேசையின் கீழ் உள்ள கால் சட்டத்தில் அகிலின் கால் மாட்டி கீழே விழ இருந்த அந்த நொடி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான்...அவள் திகைப்புடன் இவனை நோக்க.... பற்றிய கைகளை சட்டென்றெடுக்கிறான் அகில், மீண்டும் கால் இடறிட தன்னையறியாமல் மீண்டும் அவளது கைகளை இவனது கைகள் பற்றிக்கொள்கிறது
அவளோ அகிலின் கைகளை தட்டி விட்டு வெறுமனே புன்னகையோடு நகர்கிறாள்

நாட்கள் நகர நகர
அவளோடு இவனது நாட்களையும் நகர்த்த எண்ணி
காணும் தொலைவெங்கும் அவள் தரிசனத்தை நாடிட மலர்ந்த பூவாய் இவனது விழிகள் காத்து கிடக்கிறது

ஆம் யார் இவள் விடையறியா பயணத்தில் மனவேள்வியில் அவளை இடுவதற்க்குள் மங்கல ஒலி கேட்க மங்கள நாண் பூண அருகில் ஒருத்தி கை பிடிக்க காத்திருக்கிறாள்

யார் அவள்.... யார் இவள்

குழப்பத்தில் அகில்

கடந்த நினைவு சுகிப்பது நலம் எனினும் கடக்க இருக்கும் நிகழ் பொழுதில் கடந்த நினைவை கலந்து குழப்புவதில் என்ன நலம்..? தேற்றிக்கொள்கிறான் அகில்

மணப்பலகையில் அமர்கிறான் மங்கல ஒலியில் மங்கைக்கு மங்கள நாண் ஏற்றுகிறான் எல்லாமும் சுமாய் நிலவ அகிலின் மனதில் மட்டும் உறுத்தல்

அக்னி சுற்றிட அகில் எழுந்திட கால் தடுமாறி அருகில் இருந்த அவளின் கைகளை தன்னையறியாமல் பற்றுகிறான் அன்று அவள் உதிர்த்த புன்னகை மாறாமல் இன்று இவளிடம் , தட்டிவிடா அரவணைப்போடு இவன் கை அவளது கையில் இருக்க இவள் பின் அக்னி சுற்றுகிறான் அகில் லயித்த வண்ணம்


எழுத்து கற்பனை

***பெருவுடையான்***

புதன், 11 ஜூலை, 2012

என்னவளே II

சிங்கார மயிலுக்கு சின்ன குயில் கூவுது
ஆலோபங்கிளியும் ஆரிராரோ கேட்குது

இலைச்சருகு சிறகாய் துள்ளி திரியுது
மின்மினி யிங்கே கண் சிமிட்டுது

மாய கண்ணனிங்கே மன்மதனாக
மாயவள் எங்கே மனக் கூட்டு குயிலே

ஊடல் சுகம் கற்க காதல் ஏற்க வந்தேன்
வசந்தனுமிங்கே...! வாயடைத்தே போனேன்

ஓரவிழி பார்வையில் ஓடைதனில் நீ நனைய
மாராப்பு போடுதம்மா வேனிற்கால தூரல்

தூண்டில் கண்கள் சரசம் பேசிட
தூவான மெங்கும் ஒலியொளி வீசுது

ஆடுமயிலே நீ சேலை உடுத்த வருணனும்
மறைந்தானம்மா வண்ண சேலை கொடுத்திட

நெருஞ்சிகளும் உன் பாதந்தனை  பதம் பார்க்க
கைகொடுத்தேன் உன் நெஞ்சில் இதமாய் வாழ

காதல் வழி தேட மோதல் விழி வீசுகிறாய்  அடடா...
இன்பசுகம் இன்பசுகம் என்னில் நீ பேசுகிறாய்

உடுக்கை இடைதனை காண உன்னுடுப்பை
களைகிறான் பாதகன் நெருஞ்சி சகோதரன்

மீண்டும் என்னில் மோதல் விழி வீசுகிறாய்
காதல் மொழி பேசி ஊடல்சுகம் கற்கிறாய்

அடடா... இன்பசுகம் நல்லினிய சுகம்

நாற் திசையவர் அறியா நான்மறை யறிந்தேன்
நடுநிசி உறக்கம் நான் மறந்தேன்

என்னில் எனையே நான் மறந்தேன்

***பிரகாஷ் சோனா***


சனி, 7 ஜூலை, 2012

நட்போடு மீண்டும் ஓர் நாள்

மூவேழாண்டு முந்தைய நட்பின் அழைப்பு
வீட்டின் அழைப்பு மணியில் ரிங்காரமிடுகிறது

நட்புகள்...
ஆர்ப்பாட்ட அகமகிழ்வோடு இயல்பாய்
நலம் சுகிக்க பின்னோக்கி நகர்கிறது நாட்கள்....

ஆகாய கூட்டங்களாய் நட்பான காலமது

கேலி கூத்துகளிடையே காலியான மன காயங்கள்
துயில் கலையுமுன் மீண்டுமோர் குட்டி தூக்கம்
அறிமுக நாட்களில் உதிர்ந்த மரியாதை நிமித்த வார்த்தைகள்
பிருந்தா முதல் மணிமேகலை வரை மதிப்பெண் இட்டு
மகிழ்ந்த வேளை எனக்கான மதிப்பெண் முத்தமாய் விழ
வீழ்ந்த என் மனதுக்கு நட்பின் கேலி கரவொலிகளென
நுகர்ந்து சென்றது ஆராவாரமான நினைவுகள்....

நட்புகள் பலர் நலமாய் மேன்மையில் உளவென
நட்பு கூற மனமேனோ குளிர்ச்சியில் நனைகிறது
நல்லறமேற்ற நட்புக்கு என்றும் மேன்மையேயென
சொல்லிச் சிரிக்கிறது வெகுளி உதடுகள்
செருக்கில்லா நட்பவனது பேச்சிலும் மகிழ்வு செழிப்புடன்

தொடர் பேச்சில் எச்சில் விழுங்க முடியா நிகழ்வு பல
மனதை தட்டிப் பார்க்க அஞ்சலியாய் மெளனங்கள்
மீண்டுமோர் முறை இழந்தவை பெற்றிடலாமென

நொடிகள் கரைந்து கொண்டிருக்க விடை பெறும் தருணம்
ஆரத்தழுவிய நட்பு
இல்லம் ஓர் முறையேனும் வாயேன்...!  என்றிட
கண்ணீர் பெருகி தோள் சாயந்திட....
கண்ணீர் துளி மட்டும்
அவனோடு........
அவனில்லம் நோக்கி பயணிக்கிறது


****பிரகாஷ்சோனா****





புதன், 4 ஜூலை, 2012

கோடிகளை நாடி

அண்டம் கோடி அதில் விழும் பிண்டம் பலகோடி
இருப்பது பலகோடி இனி வருவதும் பலகோடி

கிட்டினர் கோடி... காடிக்கு பட்டினியர் கோடி
தாடிகள் தேடி அடிகள் ஆக்குவோரும் கோடி

தோடிகள்  நாடி...  இலயிப்போர் கோடி
கோடிகர் கோடி... கோடி ஈட்டுவோர் கோடி
கோடிப் பருவந் தனில் கோட்டிகள் கோடி

தெருக்கோடி தனில் பேடிகளும் வாடி
கோடிகளோ கேடிகளையே நாடி - இனி
கோடிதனில் புரள்வதும் யார் யாரோ

குறிப்பு :
********
                 கிட்டினர் -- உறவினர்
                 காடி         --  புளித்த கள்
                அடிகள் ---  சாமியார்(ஆச்சாரியார்)
                தோடி  ----  இராகம், பண்,கர்நாட்டிக்
                கோடிகர்-- நெசவாளர்
                கோடி  ---- புதுத்துணி(சீலை)
               கோடிப்பருவம் -- இளமைப்பருவம்
               கோட்டி -- துன்பம்,பகடி,விகட கூத்து,அழகு
               பேடி   ---- அலி, அச்சமுடையவன்

***பிரகாஷ் சோனா***






சனி, 30 ஜூன், 2012

காதலித்துப்பார்....

காதலித்துப்பார் அழகாகும் உன் வாழ்வு
இஃதோர் கவிஞனின் கூற்று
நானு வோர் நாள் காதலிப்பேன்
அவள் விழி வசங்கொண்டு கவி வடிப்பேன்
புசித்த வண்ணம் குருதியூற்று சில்லிடுமரை

இப்போது மட்டுமென்ன
ம்ம்ம்... காதலிக்கிறேன்
இலக்கண மீறா ஓரீர் மூவென நாலசைச்சீர் உடன்
தேமா புளிமா கருவிளங் கூவிளங் காய்கனி யென
சிறப்பானவளை காதலிக்கிறேன்

பன்னிரு உயிரோடு பதினென் மெய்கலந்து
ஆய்தமேந்தியவளை மூவின பகுத்தலோடு
லுகர லிகர ஐகார ஒளகார ஆய்த மகரங்
களேந்தியவளை சிறப்பாய் காதலிக்கிறேன்

அங்கொருவன் நகைக்கிறான்
நகைக்காதே... நகைத்த நொடி
நாக்கறுந்து மனம் குளறிவிடும்
மொழி திரிதல் நாகரீகமென கருதும்
நீ.... நகைக்காதே

உன் ஏளனம் புரிகிறது
தொன்மை பெரிதல்ல வெனவும்
வழக்கொழிந்திடா தொன்மை காத்து
புதுமை நின் திகழ்வதே நன்மொழியென
யாம் அறிவோம்

புதுமை ஏற்பவளே எம் பதுமை
ஓர்முறையேனும் காதலித்துப்பார்
விளங்கும் ; உன் எண்ணம் விலகும்
உதிரத்தில் கலந்த துர்நாளங்களை
துகிலுரித்து... இவளை கோர்த்தெடு
காதலி...... இனி புரியும் - உன் வாழ்வு
உண்மையிலே வளமாகும்

***பிரகாஷ் சோனா***


செவ்வாய், 26 ஜூன், 2012

காதல் + வக்கிரம் + கொலை,

கனமான விசயம் தான், இதை பார்த்த பிறகு எதுவுமே எனக்கு சொல்ல வரல பாதுகாப்பு கொடுக்க பட வேண்டிய பெற்றோரே இப்படி இருந்தால் குழந்தைகளால் என்னதான் செய்ய முடியும், ஒரு தனி மனிதனின் குரூர வக்கர புத்திக்கு எத்தனை குடும்பம் பாதிக்கிறது . இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் பல நிகழ்வுகள் நம் சமுதாயத்தில் எங்கோ ஓர் மூலையில் நடந்தேரி கொண்டு தான் இருக்கிறது 



இது போன்ற வக்கிர நிகழ்வுக்கு என்ன காரணம்...? சமூகங்கள் இதை தான் நமக்கு கற்பிக்கிறதா இவங்க என்ன சொல்றாங்க பாருங்கள்



திங்கள், 25 ஜூன், 2012

இரண்டும் எட்டும்

இந்தா பக்கத்துல தான் ரெண்டு எட்ல போயிடலாம் அப்டினு பலர் சொல்றத கேட்டிருப்போம்

இந்த ரெண்டுக்கும் எட்டுக்கும் அப்டி என்னதான் தொடர்பு இருக்கு, சம்பந்தமே இல்லாம நடந்து போறதுக்கு எதுக்கு ரெண்டு எட்டுனு சொல்றாங்க இந்த ரெண்டையும் எட்டையும் பத்தி நம் முன்னோர்கள் என்ன தான் சொல்லிருக்காங்க,ஏதோ எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் கற்றது வரைக்கும் சொல்றனே. தெரிஞ்சதை சொல்றேனு சொல்றதை விட தெரிஞ்சதை ஒரு குழப்பு குழப்பி தாரேன் நீங்க அப்டியே புடிச்சிக்கோங்க (அட குழப்பி விடறதுக்கும் யாராவது வேணும்ல)

இரண்டு : கண்ணிரண்டு, காலிரண்டு, கையிரண்டு

எட்டு : எண் ஜான் உடலமைப்பு

இந்த எட்டு ஜான் உடம்பை கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பாக்காம கையிரண்டும் வீசி நடந்தா போற தூரம் பக்கம் வந்திடும். அப்டினு வேற யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன். சரி திட்டாதீங்க நான் தான் முதல்லையே சொன்னேல்ல எதையாவது எனக்கு தெரிஞ்சதை குழப்பி தருவேன்னு...நீங்க திட்னாலும் எதோ இதுல உண்மை இருக்குற மாதிரிதான் தெரியுது (அப்பாடா குழப்பியாச்சி)

ஏதாவது ஆன்மீக குருமார்களிடம் இதை பற்றி கேட்டா அது சித்த சன்மார்க்கத்திற்கான வழின்னு மறைபொருள்ல சொல்லுவாங்க அது என்ன சித்த சன்மார்க்கம் ... எட்டு என்ற எண்ணிற்கு தமிழ் எண்களில்  என்றும் இரண்டிற்கு  என்றும் குறிப்பிடுவது உண்டு அடி உச்சி நு அர்த்தமாம் அதாவது உச்சி முதல் பாதம் வரைக்குமான ஓர் விதமான பயிற்சி அப்டினு ஒரு சாராரும் , எண் ஜான் உடலமைப்பை கொண்ட நாம் உலகில் உள்ள இருமைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறோம் இவைகளை கடந்து கடை நிலையான வீடு பேறு அடைவது அதாவது இறைவனடி சேர்தலே இந்த இரண்டு எட்டும் அப்டினு மற்றொரு சாராரும் சொல்வாங்க

எது எப்டியோ இத படிச்சிட்டு நீங்க ஒரு முடிவுக்கு வந்துருப்பீங்க

கொசுரு
*********
* எட்டு போல நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லதாம்
* யோக முறைகள் எட்டு (இயமம்,நியமம்,ஆசனம்,பிராணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை,தியானம்,சமாதி)
* சங்க இலக்கியத்தில் தொகை நூல்கள் எட்டு (நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு)
* கணித முறை படி எட்டு இரட்டை எண் ஆகும்
* சித்தி முறைகள் எட்டு (அணிமா,மகிமா,கரிமா,லகிமா,ப்ராப்தி,ப்ரகாம்ய,ஈசத்வம்,வசத்வம்)


பிரகாஷ் சோனா

  




சனி, 16 ஜூன், 2012

ஓம் சாந்தி

வார்த்தையாலிட்ட ..தீ.. எனை
வருத்திவிட்டது-அத்தீ
வீரியம் கொண்டு
விருத்தியாகிவிட்டது

சூதாட்ட சொல் கொண்டு உனை
சுத்திகரிக்க பார்க்கிறாய் -உன்
சாகசம் அறியா என்மனதை
சங்கடபடுத்தி பார்க்கிறாய்

காரணம் வினவ
களவாணியை கண்டதை போல்
கூச்சலிடுகிறாய் எனை
குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்

பொறுமையிழந்து நிற்கிறேன்
போர்கால சிப்பாய் போல

சமாதனம் அடைய என் மனது
சங்கல்பம் எடுத்து கொண்டது - நீ...
சமரசம் பேசும் வரை
சல்லாபம் வேண்டாமென்று

அடைக்கலம் கேட்டு என்னில் நானே
ஆசுவாச படுத்திகொள்கிறேன்
இருந்தும் முடியவில்லை - உனை
ஈட்டிய மனதுக்குள்
ஈட்டுப்பத்திரமாய் நான்...

சாந்தி...சாந்தி...சாந்தி
சாந்தி...மனமே...சாந்தி


***பிரகாஷ்சோனா***


சனி, 9 ஜூன், 2012

விவாசாய புரட்சி (விவசாய நிலத்தின் புலம்பல்)

தரிசா கிடந்த நான் - வாகனம்
தரிகெட்டு ஓடும் தார் சாலையாகி போனேன்
மகசூல் ஈன்ற என் வயிறும்
பாளம் பாளமா வெடிச்சி பாழா போனேன்
விளை நிலமா இருந்த நான்
ரியல் எஸ்டேட்டுக்கு விலையாகி போனேன்

விவசாய குத்தகைக்கு போன எம்மேல
சாயம் பூசுன மகராசி குத்தவச்சிட்டா மாளிகையா
காணி நிலமும் இப்போ அவளுக்கே காணிக்கையா
நஞ்சையும் புஞ்சையும் நைந்து போச்சு
பட்டறை கழிவால எல்லாம் நஞ்சாகி போச்சு
சாகுபடியும் இப்போ கழிவா போச்சு

நான் இன்னும் மலடு ஆகல - என்
நண்பன் மட்டும் கிழடு ஆகிட்டான் - நீயோ
விஞ்ஞானத்துக்கு கைகூலியாகிட்ட
வசதி வாழ்கைக்கு எனை மறந்தே போயிட்ட
சகதியில நின்னவனும் காணா போயிட்டான்
சகட்டு மேனிக்கு அவன் வீணா போயிட்டான்

வேள்னா கொடைனு சொல்லுவாங்க அதனாலயே
எனக்கு வேளாண்ணு பேரும் வச்சாங்க
யாராவது எனக்கு கொஞ்சம் கொடை தாங்க
அதுவும் பசுமை கொடையா தாங்க - உங்கள
காக்கும் எனக்கு எனது பட்டினி சாவ தடுக்க
மீண்டுமோர் பசுமை புரட்சி கொண்டுவாங்க

களை எடுக்க வந்த காலம் மாறி
களை கூட இல்லாம களையிழந்து நிக்கிறேன்
என்னை கொஞ்சம் கை தூக்கி விடுங்க
விவசாயத்துக்கு ஒரு புரட்சி பண்ணுங்க

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

புதன், 6 ஜூன், 2012

என்னவளே...!


பரீட்சைக்கு
மனப்பாடம் செய்கையில்
உனக்கான வாசனையோடு
கார்மேக கருங்கூந்தலை
என் மீது வீசி சென்றாயடி

நொடி பொழுதில்
மனப்பாடம் செய்த 
வரிகளணைத்தும் உனை 
மனப்பாடம் செய்ய துடிக்குதடி
உனை மனப்பாடம் செய்ய
என் மனதுக்கு கற்று தருவாயா
இல்லை
உனை மணமுடிக்க தான் விரல் 
கொஞ்சம் தருவாயா
ஆணுலகின் ஈர்ப்பு விசை நீதானடி
உன் பாதம் தேடி வந்து விழுந்த
நியூட்டனின் ஆப்பிளும் நான் தானடி
மீண்டுமோர் முறை உன் பார்வை
என் மீது வீசி செல்வாயா
இல்லை
எனை நேசிக்க தான் வருவாயா
ஏதோ மயக்கம் 
ஏனோ தயக்கம் எல்லாம் உன்னாலே
ஏங்குது மனம் தூங்காமல் தன்னாலே
காதல் பயம் 
காதல் ஜுரம் என்னிலே
எல்லாம் உன்னாலே
என்னில் நீயும் வந்திடுவாயா 
காதல் தாகம் தீர்த்திடுவாயா


*************************************************
என்றென்றும் உனக்கானவனாய்
பிரகாஷ் சோனா

வியாழன், 31 மே, 2012

தேன் நிலவு

தேன்...
ஆதிமனிதனின் முதல் உணவு
சுவைகளின் முதல்வன்
பூலோகத்தின் அருமருந்து
பூக்களின் சொத்து

லட்சம் போராளிகளை(தேனீக்களை)
வென்றெடுத்த அமுது

நெடுந்தூர பயண களைப்பில்
தோள் சாய்ந்து கிடந்தவளை
மறந்தே போனான் அமுதன்

மூன்று வருட மரண சுகம் அனுபவித்த
காதல் வாழ்க்கைக்கு பின்
சிறகு விரித்த பறவையாய் அவர்களின்
தேன் நிலவுக்கான பயணம்

பெயருக்கேற்ப கொஞ்சி பேசுவதில்
அவள்... தேன் மொழிதான்

அவன், தேடல் கொண்டவன்.
போராளி, காதலிக்கும் போது
அவளின் மனதை அறிய முற்ப்பட்ட
போராளி.

ஏன் நெடு நேர மெளனம்
ஏதும் சிந்தனையா
அமுதனின் மெளனத்தை கலைத்தால்
தேன்மொழி

இந்த தேனீக்களுக்கு
சுறுசுறுப்பும் கட்டுகோப்பான ஒற்றுமையையும்
யார் சொல்லி தந்தார்கள்
என்று சிந்தனை

அவை ரிங்காரமிட்டு ஆடி பாடி அப்படி
என்னதான் பேசிகொள்ளும்
என்று சிந்தனை

தோள் சாய்ந்தவள்
வாள் பார்வை வீசி

நீங்கள் தேன் பிரியரா

ஆம்... இந்த தேன் மங்கை
மீது பிரியம் கொண்டவன்

போதும்... தேன் தெவிட்டிவிட போகிறது

தேனோடு இந்த அமுதன்
சேர்ந்திருப்பதால்
தெவிட்டாது கண்ணே..

கட்டியணைத்து , தேனீக்கள் அறியா
இதழ் மலரோடு இதழ் மலரில்
முத்தமிட்ட அவளை
மின்சார முத்த பாய்ச்சலை கலைத்தது
பெண்ணுக்கே உரித்தான நாணம்.

பொய்யான கோபத்தில்
மெய்யான வெட்க புன்னகை
உதிர்த்தாள்.

தேன்மொழி
அங்கே பார் மனிதனுக்கான
உணவு சங்கிலிக்கு
ஆயத்தமாகின்றன தேனீக்கள்

விளங்காமல் விழித்தாள் தேன்மொழி

தேனீக்கள் பூக்களின்
மகரந்த சேர்க்கைக்கு
ஆயத்தமாகின்றன பெண்ணே

ஆளுயர மரங்கள் புதர் மண்டிய காடுகளுக்கு
அப்பால் சூரியன் மறைந்தே கிடந்ததால்
இருள் மங்கிய சூழல்
வெப்பம் தனித்த மெல்லிய குளிர் காற்று
இருந்தும் மயங்கிய நிலையில் தேன்மொழி
காதல் மனம் கொண்ட புதுமண தம்பதியல்லவா

தேன் நிலவுக்கான விளக்கம் தெரியுமா அமுதன்

ம்ம்ம் சொல்கிறேன் கேள்

தம்பதியரின் உள்ளங்கைகளில்
தேனை ஊற்றி நிலவும் தேனும்
ஓர் கோட்டில் இணையும் நேரம்
இவர்களும் இணைந்து
தேனை ஒருவர் மாற்றி ஒருவர்
ஊட்டி விடும் தருணம் அது பெண்ணே

உன் கட்டுகதையை நிறுத்து
செல்ல முனுமுனுப்புடன்
தேன்மொழி

உன் ஒவ்வொரு வெட்க புன்னகையும்
ஒவ்வொரு தேன்துளி போலல்லவா இருக்கிறது

நான்
உன் தேன்துளி வெட்க புன்னகையை சேகரிக்க
அந்த தேனீக்களை விட படாது பாடல்லவா
படவேண்டியிருக்கிறது

தேனீக்கள்
தேனை சேகரிக்க
லட்சம் முறை பறக்கும்போது
உனக்கென்னவாம் எனை
லட்சம் முறை கூட
வெட்க புன்னகை சிந்த வை

தேன்மொழி
உன் நடை, இடை,  உடை
ஒரே மொழி பேசினாலும்
செவ்விதழ் பதித்த உன் முகம்
பல மொழி பேசுகிறதே அதிலும்
அந்த செவ்விதழோரம் சிறு
குறு குறு துடிப்பு ...அடடே
உண்மையிலே உன் மொழி
தேன்மொழி தான்

சோமபாணம் தேனில் உருவானது
பலமுறை படித்தும் மனம்
ஏனோ ஏற்கவில்லை

உன் இதழ் அசைவின் பேச்சில்
கிறங்கிதான் போயிருக்கேன்
உண்மையிலே சோமபாணம்
தேனில் உருவானது தான்

சிறு வெட்க புன்னகை களைந்து

அமுதன் அங்கே பார்
ரோஜா மலர்

ரோஜா இதழுக்கும் தேனுக்கும்
ஓர் தொடர்பு உண்டு
பிஸ்கட் உருவாக இவர்கள் தான்
முதல் காரண கர்த்தா

தேன்மொழி
இந்தா இந்த பூவின் தேனை ருசி
ஒவ்வொரு பூவிலும் ஒவ்வொரு ருசி

தேனிலவில் தேன்மொழியோடு
மனதில் ஓர் புது தெம்பு தான்

மங்கோலிய வீரன் செங்கீஸ்கானுக்கு
போர்கால உணவாய் தெம்பூட்டியது
அந்த தேனென்றால்
இந்த அமுதனுக்கு
தேனிலவில் தெம்பூட்டும் உணவாய்
நீ தானடி தேன்மொழி

வெட்க புன்னகையாள்
மீண்டும் நாணத்தோடு


எண்ணங்களும் எழுத்தும்
****பிரகாஷ்சோனா****




புதன், 30 மே, 2012

நான்..யார்.......சாமி..யார்

நான் யார் ... நான் யார்? , சாமி யார்? என்னை குழப்பிய வரிகள் உங்களுக்கும் இது குழப்பமான பதிவாக இருக்கலாம்.

நான் யார்..?


நான் யார் என்ற கேள்வியை உனக்குள் எழுப்பு, சிந்தி என பல சாமியார்கள் சொல்லி சொல்லியே உங்களையும் என்னையும் குழப்பி மகான்களாகி அமரர் நிலையையும் எய்து விட்டனர்.

நான் நான் என்று அடிக்கடி சொல்லிகொள்கிறோமே அந்த ”நான்” யார் என்று உங்களுக்குள்ளே நீங்களே கேள்விகேட்டு பாருங்கள் உடனே நான் சிவா என்று உங்களது பெயரை சொல்லிகொள்வீர்கள், மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டே இருங்கள் அப்போது நீங்கள் வகிக்கும் பதவியையோ, தொழிலையோ, குடும்ப பாரம்பரியத்தையோ (இன்னார்மகன், இன்னார் பேரன்) சொல்லிகொள்வீர்கள் நான் யார் என்ற ஒற்றை கேள்விக்கு பதில் தெரியாமல் பெயர், பதவி, பாரம்பரியம், என பல பதில்களை சொல்லிகொள்கிறோம், இவற்றையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டுமோர் முறை நான் யார் என்ற கேள்வியை உங்களுக்குள்ளே எழுப்புங்கள்.... உங்களுக்கு பதில் கிடைப்பது சிரமமே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் , சதை நரம்புகளாலான காற்றடைத்த பிண்டம், எண்ண குவியல்களின் களம் என்ற பதிலே நம்மில் உதிக்கும்,சரி இதையெல்லாம் நீக்கிவிட்டு மீண்டும் ஓர் முறை நான் யார் என்றுஉங்களை நீங்களே கேட்டு பாருங்களேன்.பதில்..........ஒன்றுமே இல்லை

சரி கனவிலும் நனவிலும் இதே கேள்வியை கேட்டு பாருங்களேன், அட நனவுல கேட்டு பார்த்திடலாம், கனவுல எப்டி கேக்க முடியும் காரிருள் போர்த்தி என்னை நானே அறியா நிலையிலல்லவா கிடப்பேன், என்று நிங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது...ம்ம்ம் கேட்க முடியாது தான்

ஆக, நான் யார் என்ற கேள்விக்கு நமக்கான அடையாளங்களையோ செயல்களையோ தான் பதிலாய் தருகிறோம். நான் யார் என்ற கேள்விக்கு மேற்சொன்ன பதில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு பார்த்தால் அதுவே நான் என்ற சுயஆத்மன், அந்த நான் என்ற ஆத்மனுக்கு அடையாளங்களோ குறிகளோ குணங்களோ கிடையாது, எந்த நிலையிலும் மாறாமல் குணங்குறியற்று இருப்பது எதுவோ அதுவே ”நான்”எனும் ஆத்மன், என்று நான் யார் என்ற ஆத்ம ஆராய்ச்சியில் ரமணமகரிஷி சொல்லியிருப்பார்.நான் எனும் அந்த ஆத்மனை நம்மில் நாம் உணர்ந்திருந்தாலே பூலோகத்தில் பிரச்சனைகளே அற்று இருந்திருக்கும் ..சரி அடுத்து இந்த சாமிகளை பற்றி "ச்சி" இந்த ஆசாமிகளை பற்றி பார்ப்போம்.

சாமி யார்..?

சாமி சாமி என்று அடித்து கொண்ட கால கட்டங்களில் நான் யார் என்பதை உணர் என்று சொல்லிய ஆசாமிகள் தான் நமது மாய திரையை விலக்கிய சாமி என்று சொன்னாலும் தகும் என்று சிலர் சொல்வர். ஆசாமிகளாகிய நாம், நாம் யார் என்பதை உணர்ந்தாலே போதும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஏதுடா சாமி என்று புகட்டியவர்களும் அவர்கள் தானே என்றும் சிலர் வாதிடுவர்.

”நான் யார்” என்று கேள்வி கேட்க தெரியாதவன் தான், ”நான்” எனும் ஆத்மனை உணராதவன் தான், தனக்குள்ளே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் என்று சொன்னவர்களையே சாமியாக்கி விடுகிறார்கள். நமக்கான பணிகளை நாம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஒருவன் நம்மை பார்த்து நீ உலகில் பல இடங்களில் பயணம் செய்திருப்பாய் ஆனால் ஓர் நாளாவது உனக்குள் நீ பயணம் செய்திருக்கிறாயா என்று கேட்டால் அவனை பார்க்கும்போது நமக்கு என்ன தோன்றும் ஒன்னு பைத்தியம்னு தோனும் இல்லன்னா என்னாமா யோசிக்கிறாம்பா நீ அதிமேதாவிதாம்பா இப்டி தான் எண்ண தோன்றும்.

இப்படி தனக்கான பாதையை விட்டு மாற்று சிந்தனையில் சிந்திப்பவர்களை ஞானி என்றும் சாமி என்றும் நம்மில் பலர் ஏற்றுகொள்கின்றனர். அவர்களின் மாற்று சிந்தனை உங்களை சிந்திக்க வைக்கிறதா அப்படியென்றால் அவர்களது மாற்று சிந்தனையையும் அவர்களின் சாரத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் வேண்டாமென்றில்லை அவர்களை பின்பற்றி அவர்களை அதிமேதாவிகளாக்கி சாமியாக்கி மேலுயர தூக்கி நிறுத்தாதீர் விளைவு நமக்கே

இயற்கை சக்திகளின் சீற்றங்களுக்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் பயந்த நம்மவர்கள் தமக்கான பாதுகாப்பு வேண்டி அச்சக்திகளை சாமியாக்கிய வேளையில், மாற்று சிந்தனையுள்ள ஆசாமிகள் நம்மிடையே சாமிகளாகி போனர். இயற்கையை மீறிய சக்திகள் அனைத்தும் மாயைகளே என்று எப்போது நாம் உணர்கிறோமோ நான் என்ற ஆத்ம சொரூபனை எப்போது நாம் உணர்கிறோமோ அன்று இந்த சாமிகள் மீண்டும் ஆசாமிகளாகி போவர்.

இது எனது கருத்து, உங்கள் சிந்தனையோடு எனது கருத்தை ஒப்பிடும்போது சில எதிர்மறை கருத்து இருக்கலாம்.....விதிவிலக்கல்ல

எண்ண எழுத்துகளுடன்
***பிரகாஷ்சோனா***

செவ்வாய், 29 மே, 2012

ஆதி வித்துக்கள்

எண்ணங்களுக்கு தூபம் போட்டு
வண்ண கனவுகளை வளர்க்க வேணாமடா
நல் உள்ளங் கொண்டு வல்லோன் வலியோன்
வாழ்த்திட்டால் போதுமடா

மாய உலகில் சாயமிகு காயத்தை
அகற்றினால் மன காயங்களும் மாயமாகுமடா
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் துச்சமெனகொள்
உன்னில் மகிழ்ச்சியும் தஞ்சமாகுமடா

வன்மமில்லா கன்மங்களோடு
திண்மமாய் வாழ்ந்திட்டால்
அஃதே வாழ்வியலின் உச்சமடா-உனக்கு
வானளாவிய புகழ்ச்சி நிச்சயமடா

கூச்சம் தவிர்த்து பயத்தை போக்கி
சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் - வாழ்நாள்
போராட்டம் சிறிதேனும் குறையுமடா
 மனம் விரைவில் நிறையுமடா

புத்தியை கிளரி சிந்தையுணர்ந்து
நிதானமாய் கவனித்து எண்ணங்களை
செயல்படுத்தினால் தரணியில்
நிரந்தரமாகும் உன் பவனியடா

இஃது ஆதியில் புகட்டிய வரிகளேயடா -ஆகையின்
அகமறிந்தோன் ஏட்டினையும் சிறிது பாரடா
இதுவே வாழ்வியலின் வித்தென நீயும் கூறடா

 எண்ண எழுத்துகளுடன்
****பிரகாஷ்சோனா****

புதன், 9 மே, 2012

மார்கழி

தேகம் குளிருது நெஞ்சு சிலுக்குது
மஞ்ச வெயிலு மதி மயக்குது
வாட காத்தும் எனை வாட்டியெடுக்குது
ஆவி பறக்க வந்த ஆகாரமும் தாவி பறக்குது

இன்ச் இன்ச்சா இஞ்சி முத்தம் வச்சி கலங்கடிக்குற
பிஞ்சு நெஞ்ச பஞ்சு போல பதற வைக்குற
கட்டுபாட்டை மீறிதான் கட்டியணைக்குற
அத்து மீறி எனையே ஆள பாக்குற

உதிரமும் உறைஞ்சிதான் போகுது
சுவாசமும் குறைஞ்சியே சுழலுது
உன் வாசம் மட்டும் வசமாகுது - மாசமோ
மார்கழி மாசமாகுது பனி பிரசவமாகுது

முட்டி மோதி முடங்கிதான் போறேன்
காலை வெயிலு வந்தும் கெறங்கியே தான் வாரேன்
என் பணி தோய்ந்திருக்க - உன் பனி
அப்பப்பா... முன்பனி பின்பனி தான்

மாறுமோ மார்கழி
தீருமோ என் மீதான பழி
வாராதோ வசந்தம்
எனையும் கொஞ்சம் பாராதோ

***இவன்***
பிரகாஷ் சோனா

யுத்தம் செய்

யுத்தம் செய்
நித்தம் நித்தம்
நல் யுத்தம் செய்

சிந்தை பெற
பித்தம் தெளிய -நல்
யுத்தம் செய்

விந்தை பெற -நல்
யுக்தியுடன்
சித்தம் கலங்க -புது
யுத்தம் செய்

யுத்தம் செய்
யுத்தம் செய்
வீழ்ந்திடாத -இனியும்
வீழ்த்திடாத யுத்தம் செய்

நல் எண்ணங்கொண்டு
வித்திட்ட யுத்தம் செய்
பாரும் விக்கித்து போகும்
புது யுத்தம் செய்

பிணிவந்தாலும் -தன்
பணியுணர்ந்து
யுத்தம் செய்

தாழ்வுமில்லா ஏற்றமுமில்லா
சாதியில்லா மதமுமில்லா
பேதமில்லா பாதகமில்லா
நல்லுலகம் படைக்க
யுத்தம் செய் புது யுத்தம் செய்

வீழவ்து நாமாயினும் எழுவது
புது இனமாகட்டும் அதுவும்
நம் மினமாகட்டும்
யுத்தம் செய் நல் யுத்தம் செய்

***இவன்***
பிரகாஷ் சோனா

சனி, 5 மே, 2012

யோவ் ...போயா ஆளும் மண்டையும் சைசும்

ஹலோ சார்
இந்த சூட்கேஸ் உங்களுதா
இல்ல ...
அவுருது
அவுருதா இல்லையே நல்லா டைட்டா பெல்ட் போட்டிருக்கேனே
ஐயோ .....
உங்க பின்னாடி நிக்கிறாரே அவுருது
இல்லையே அவரும் நல்லா டைட்டா......
யோவ் ...போயா ஆளும் மண்டையும் சைசும்

பிரகாஷ் சோனா

சுட்ட ஃபேமிலி

ம்ம்ம் நல்லாயிருக்கே இந்த தோசைய சுட்டது யாரு
நான் தா
நீங்களா...
இல்ல உங்க அம்மாகிட்ட இருந்து.......
அம்மாவா
இல்ல
கடையில சுட்டது....
ஐயோ.......
புரியுற மாதிரி சொல்லுங்களேன்
நம்ம முனியாண்டி மெஸ்-ல தோசை சுட்டாங்களா
உங்கம்மா அதை கடைகாரனுக்கு தெரியாம சுட்டுட்டாங்க
 உங்கம்மாவுக்கு தெரியாம நான் சுட்டுட்டேன்
இப்ப நீ எங்கிட்ட இருந்து...........
போதும் தலை வலிக்குது
ஆமா இது என்ன பார்சல்
ஹிஹிஹிஹிஹி இது
எங்க ஆபீஸ்ல சுட்டது

(ஃபேமிலியும் சுட்ட ஃபேமிலியா இருக்குமோ)

பிரகாஷ் சோனா

வியாழன், 3 மே, 2012

திகைப்புடன்... காகிதங்களை தேடி

தேடிப்பிடித்த எழுத்துகள் 
வரிகளாகுமுன்
காகிதங்கள் கசங்குவதும்

நெடுநேர விழித்தலுக்கு பின்
விழிகள் அயர்வதும்

நடுநிசியில் நிர்மூலமான
அரைகுறை நித்திரையும்
வழக்கமாகிட......

சேவல் கூவி விடியாத இரவுகள்
அலார ரிங்காரத்தில் விடிய
காலை நேர தேனீரும் 
கசப்பாய்...

எந்திரலோக பயணத்தில்
நான்.....

வழியெங்கும் செவித்திரைக்கெட்டிய 
துர்நாற்றங்கள் காட்சி பிழைகளாய் 
ஆங்காங்கே...

ஒவ்வா மனவியல்புகளுடன்
ஒன்றிய மாமேதைகள்
பணந்திண்ணி கழுகுகளாய்

சுழலுலகின் சூழலால் 
சுழலில் சிக்கிய 
மனுதர்ம மறியா மானிடர்கள்

கல்வி யாது மொழி யாது -என
அறியாது... சமூக சுமைகளுடன்
மழலை பிஞ்சுகள்

அன்று முதலின்று வரை -எம்
பெண்டுகளை போக புசித்தலாகவே
காணும் காமுகர்கள்

அன்பு களைந்த பற்றுதலாய் 
மெய் களைந்த உந்துதலாய் 
மதங்கள்...மடாதிபதிகள்

இவைகளை எங்ஙனம் களைவது
திகைப்புடன் 

மீண்டும்... 
கண்டதை வரிகளாக்கிட 
காகிதங்களை தேடி 
எழுத்துகளுடன் யான்....

***பிரகாஷ் சோனா***

புதன், 28 மார்ச், 2012

ஓ...! பெண்ணே


பழமை படித்ததாலென்னமோ
என் எண்ணம் சுருங்கிவிட்டதோ
பாரும் அறிந்ததால்தான் -உன்
ஆடையும் குறைந்துவிட்டதோ

மாற்றான் தாய் பிள்ளையானாலும்
நீ..! தமிழ் தாயின் மங்கையடி-நாம்
மானங்காத்த மறக்குடியடி -நம்மை
மறக்க வைக்குதடி நுனிநாக் காங்கிலம்

மேலை நாட்டு மொழியும் நம்மை ஆட்கொள்ளுதே
கீழை நாட்டில் நம் தொன்மைகள் அகப்படுதே
நம் நாட்டில் மட்டும் உணராதது ஏனடி பெண்ணே
அந்நிய மொழியும் இருக்கட்டுமடி எம் மொழி வதைபடாமலே

மொழி...! உனக்குமெனக்குமான புரிதல் மட்டுமேயடி
அஃது உலகை கற்கும் கல்வியொன்று மில்லையடி-பிறநாட்டு
நல்லறிஞர் சாத்திரங்கள் நம்மொழியில் பெயர்க்க பாரதி சொன்னானடி
தமிழ் மொழியை மறக்க சொல்லலையடி.. பெயர்க்க சொன்னானடி

தனிமனித சுதந்திரத்தில் தலையிடலை பெண்ணே
தனியாத என் ஏக்கத்தை சென்னேன் கண்ணே
இறுகிய ஆடைக்குள் புதைத்திடாதே -நம் தமிழ் 
தனித்துவத்தை தங்கிலீசால் நறுக்கிடாதே

உன் அப்பன் சொப்பனம் இதுவல்ல பெண்ணே
பாரதியின் புதுமைபெண்ணாய் நீ இரு கண்ணே
நிறை மங்காய்..! உனை குறையொன்றும் சொல்லலையடி
உன்னொளி கண்டே ..! நம் குலம் தழைக்குமடி

தமிழன்னையின் உயிர் உன் கையிலடி-அவளுயிர்
காக்க உன் பிள்ளைக்கு சிறிதேனும் தமிழ்பால் ஊற்றடி
பீறிட்டு அழும் குழந்தையும் வீறிட்டு எழுமடி -என்
தமிழன்னையும் சிறப்பாய் தவழ்வாளடி

படிப்படியாய் எம் குடி தழைக்க உம் மடியே சிறந்ததடி
கலப்பில்லா தமிழ் வளர்க்க நீயே தகுதியடி
தொன்மை தமிழை செம்மை படுத்தவே-பெண்ணே
களப்பணி காண வருவாயோடி

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா 

வியாழன், 22 மார்ச், 2012

நாட்டுபுற கிராமிய பாடல்கள்


இந்த பதிவை நான் எழுத பெருமை பட்டாலும் சிறிய வருத்தமும் உண்டு ஏனென்றால் இக்கலை அழியக்கூடிய தொய்வு நிலையில் இருப்பதனால் அட என்ன கலைன்னு கேக்குறீங்களா நம்ம நாட்டு புற இசை கலைகள் தாங்க...அட ஆமாங்க முன்பெல்லாம் கிராமங்கள்ல எதற்கெடுத்தாலும் பாட்டு பாடுவாங்க குழந்தை பிறக்கும் முதல் இறக்கும் வரை....

குழந்தைக்கு தாலாட்டு பாட்டு , சும்மா சுற்றி திரியிற இளங்காளைகளுக்கும் கன்னியருக்குமான காதல் பாட்டு., விளையாடும் போது பாட்டு , வேலை செய்யும் போது சோர்வு தெரியாமலிருக்க நடவு பாட்டு ,ஏற்றம் இறைக்கும் போது பாட்டு , வழிபாட்டு பாட்டு ,கதை பாட்டு, திருமண சடங்கு பாட்டு ,நின்னா பாட்டு, உக்காந்தா பாட்டு, கும்மி பாட்டு ,குலவ பாட்டு இப்டி நம்ம தமிழர் மரபுல இசையோடும் இயற்கையோடும் ஒன்றியே வாழ்ந்திருந்திருக்காங்க நம்ம முப்பாட்டன்மார்கள் .

ஆனால் நாம இப்ப நமக்கு புரியாத மேற்கத்திய இசையோட கலந்துட்டோம் சரி அதெல்லாம் இப்ப நமக்கெதுக்கு வந்த விடயத்தை சொல்லிடுறேன்.

நாட்டுபுற பாடல்களை பற்றி எனக்கு தெரிந்த , கேட்ட ,படித்த சில பாடல்களை தான் குறிப்பிடலாம்னு இருக்கேன். சரி இப்ப முதல்ல குழந்தைங்க பாட்டுல இருந்து ஆரம்பிப்போம் குழந்தைக்கான தாலாட்டு பாட்டுல மாமன்மார்களுக்கு முக்கியத்துவம் குடுத்து பாடபட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியல ஒரு வேளை குழந்தைக்கு தாய்மாமன் முக்கியத்துவம் கருதி கூட இருக்கலாம் உதாரணத்துக்கு

”பால் குடிக்க கிண்ணி
முகம் பார்க்க கண்ணாடி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ”
                                                     
அதேபோல குழந்தை பயன்படுத்தும் பொருட்களை வர்ணனை படுத்தியும் அவன் பிறப்பின் பெருமைகளை பற்றியும் பாடபட்டிருக்கும். மேலும் குழந்தை வளரும் தருணங்களில்

”தப்பளாங் குட்டி தவழ்ந்து வர
தரை எத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டியானை குதித்து வர
குடில் எத்தனை தவம் செய்ததோ”

இப்படி குழந்தை பிறந்தது முதல் அடியெடுத்து நடப்பது விளையாடுவது வரை  குழந்தைக்கான நாட்டுபுற பாடல்கள்..உண்டு. சிறு குழந்தைக்கான விளையாட்டு பாடல்
ஆலையிலே சோலையிலே;ஆலங்காடி சந்தையிலே
கிட்டிபுள்ளும் பம்பரமும் கிறிக்கியடிக்க
பாலாறு பாலாறு பாலாறு - னு

சொல்லிகிட்டே கில்லியடிப்பாங்க அதே போல இளைஞர்களும்

நாநதா வீரனடா; நல்லமுத்து பேரனடா
வெள்ளிசிலம்பெடுத்து விளையாட வாரேன்டா
தங்க சிலம்பெடுத்து தாலிகட்ட வாரேன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு - னு

கபடி ஆடுவாங்க சரி நம்ம இளைஞர்கள் கபடியும், கிட்டி மட்டுமா விளையாடுவாங்க அட ஆமாங்க காதல் விளையாட்டுலையும் கை தேர்ந்தவங்க நம்ம இளைஞர்கள், அவரவர் முறை பெண்களை கேலி செய்து பாடும் பாடல்கள் அவளின் கடைகண் பார்வைக்காக ஏங்குவது போல் பாடல்கள் என நம் நாட்டுபுற பாடல்களில் உண்டு. அதிலும் பெண்கள் தான் கிண்டல் செய்வதில் கெட்டிகாரங்க அட ஆமாங்க இத கொஞ்சம் கேளுங்க

மாமா மணியக்காரா என்னை கட்டிக்க
மஞ்சவடை சுட்டுப்போடுறேன் என்னை கட்டிக்க
கூளூரு போறமட்டும் குத்து பட்டுக்க
கொழுக்கட்ட சுட்டு போடுறேன் புட்டு போட்டுக்க - இப்டி

ஒரு பெண் ஒரு ஆண்மனை கேலிசெய்யறபாட்டு அதே போல அத்தை மகனை கேலி செய்யுற மாதிரி பாட்டுகளும் உண்டு ...இதோ...

நெல்லு வெளஞ்சத பாருங்கடி யம்மா
நெல்லு சாஞ்சத பாருங்கடி
நேத்து பொறந்த அத்த மவனுக்கு
மீசை மொளச்சத பாருங்கடி

அதேபோல திருமண நிச்சயித்த பெண் தனக்கான ஆண்மகனை கேலிசெய்யும் பாடலும் இதோ...
என்னை ஏண்டா பாக்குற நீ சும்மா சும்மா
சுண்ணாம்புக்கு பாக்குறேண்டி உன்னை உன்னை
உனக்குதாண்டா பாக்குறாங்க என்னை என்னை
அதுக்குதாண்டி பாக்குறேன் உன்னை உன்னை

அதே போல கோவலன் போல சுற்றி திரியுற கணவனை பார்த்து மனைவி பாடுற மாதிரி ஒரு பாட்டு
சாமத்தில பூத்த பூவு மச்சா
சாமந்திப்பூ நானிருக்க
சாறிப்போன பூவுக்கு தான் மச்சா
சந்து சந்தா நீ சுத்தலாமா
இப்படியாக ஒவ்வொரு நிகழ்வுக்கும் பாடல்களா பாடி இசையோடவே ஒன்றி நாம் வாழ்ந்திருக்கோம், அதே போல பாடல்களை பாட எழுத்து வரிகளை கையாண்ட முறைகளும் அருமையா இருக்கும். சில பெருசுகளின் பாடல்களை கேட்க தவமாய் காத்திருந்திருப்போம், ஏன் நம்ம கம்பன் கூட ஏற்றம் இறைக்கும் விவசாயின் பாடலுக்காக ஒரு நாள் முழுவதும் காத்து கிடந்ததாக கதைகளும் உண்டு இதோ அந்த பாடல்
மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே

மரித்தோருக்கான பாடல் :
ஆரங்கி ரவிக்கையும் ஆனைமுக தங்க காப்பும்
அதட்டி கழட்டையில என் அங்கம் நடுங்குதே
பூவாலழகியம்மா நான் புண்ணியரோட மனைவியம்மா
புண்ணியரத் தோத்தேனே பூவிழந்து போனேனே
மஞ்சளழகியம்மா நான் மன்னனோட தேவியம்மா
மன்னவரத் தோத்தேனே மஞ்சளிழந்து போனேனே
பொன்னு திருவளைய நான் பொறக்கையில போட்டாளையா
புண்ணியனா வாசலிலே பொடி பொடியாவுதே

இப்படி நிறைய பாடல்கள் உண்டு என்னால் எல்லா பாடல்களையும் பதிவிட முடியல மீண்டும் சந்தர்பம் கிடைக்கும் போது பகிர்கிறேன் முடிவா ஒரு சின்ன கும்மி பாட்டோட பதிவை முடித்து கொள்கிறேன்
  
வாங்கடி வாங்கடி தோழி பெண்டுகளா-வள்ளி
மாமயில் பாட்டை படியுங்கடி
கானலில் இருந்த மாமயிலே-கந்தன்
கண்ட கதைய படியுங்கடி
 குறவர் குடிசை நுழைந்தானடி-அந்த 
கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி
துறவர் வணங்கும் புகழாண்டி-அவன்
தோற்றத்தை பாடி அடியுங்கடி
உங்களுக்கும் ஏதாவது கிராமிய பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடுங்க மீண்டும் சந்திப்போம்

உதவிய பக்கங்கள் : நாட்டுபுற இயல் , விக்கி , கிராமியம்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
பிரகாஷ் சோனா 

வெள்ளி, 9 மார்ச், 2012

தாய்மையே போற்றி ! பெண்மையே போற்றி !

சிற்றின்ப போகம்
சினைப்பை சுமக்கும் தேகம்
சதை நரம்புருவாக்கும் பட்டறை
இல்லை இல்லவே இல்லை

இவள்
அன்பின் ஆழ்கடல்
அணைப்பில் ஆழிபேரலை
இவளின் உதயம் உலகுக்கான
ஊழியம் அவ்வளவே

அஃதிலை
இவளின் உதயம் உலகுக்கான
ஊதியம் ஆம் ஊதியமே

பிறப்பை மறந்து
உறவை சேர்க்கும் உன்னதம்
உணர்வை புதைத்து
இல்லையில்லை
உணர்வை விதைத்து உலகை இணைக்கும்
சங்கமம்

இருபாலருக்கும் உண்டு முலையிரண்டு
தேனூர் அமுது சுரப்பது எம் பெண்டீர்கே
தரணியெங்கும் உண்டு இருபாலர்
ஆளுமை செய்வது எம் பெண்டீரே

ஆம்
வான்முகிலாய் மதியாய்
பூமலராய் நீரோடையாய்

பிள்ளையின் ஏக்கமும்
நோக்கமும் அறிந்தவள்-அதனால்
பலநாள் தூக்கம் இழந்தவள்
உலகுக்கு நிதானத்தை கற்பித்தவள்

ஆம்
பேதையாய் பெதும்பையாய்
மங்கையாய் பெண்மையாய்
தாய்மையாய் அதுவும் பொறுமையாய்

தாய்மையில் தாயை நோக்கியவள்
பெண்மையில் தாய்சேயை தழுவியவள்
தாரமாய் தனை தாரை வார்த்தவள்

ஆம்
சொல்லிழந்து செயலிழந்து தேகம் மெலிந்து
தள்ளாடும் கிழவியை தழுவியவள்

சமுதாய சீரழிவில் ஒன்றிரண்டு
சிக்கிருக்கலாம் சில விரசமும் இருக்கலாம்
விதிவிலக்கல்ல

ஆம்
வாடகைதாய் கற்புசூறை தாசியாட்டம்
கேளிக்கையாட்டம் - இவ்
விச்சையும் ஒச்சமும் பெண் புகழ் மிரட்சியில்
ஒடுங்கட்டுமே அனைத்தும் ஒழியட்டுமே

சரி... சரிசரி
உன் புகழ் பாடி
கவி வழியில் நிருத்தற் குறியிட்டு
உனை யினங்கான விருப்பமுமில்லை
உன் வதை தனை கதையில்
வகை படுத்தும் நோக்கமுமில்லை
ஆ வென்று வியக்க நீ விந்தையுமில்லை

நீ ஓர் இயக்கம் அங்கம் - என்
பூமிதாயின் சுழற்ச்சி ஊற்று
இல்லையில்லை சுனையூற்று
நீ எமது சுவாசம்

ஆம் எம்மக்காள்
இவளை வதைத்து புதைத்து கதைத்து
வீழ்த்தாதீர் வீழ்வது நம் சமுதாயமே
இதை விடுத்து

பெண்ணுக்கு ”மை” போட்டுதான் பாருங்களேன்
பெண்மையின் தன்மை புரியும்
பாவையின் புதினம் புலப்படும்
மங்கையின் மாட்சி தெரியும்


என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

சனி, 25 பிப்ரவரி, 2012

பனை (கற்பக விருட்சம்)

சிவாவுக்கு அந்நாளின் இயந்திர வாழ்க்கை முடிவடையும் தருணம் ஆம் வேலைக்கு போய்விட்டு சோர்வாய் வந்து சோபாவில் அமர
என்னங்க இன்னைக்கு ரொம்ப வேலையா என்று சிவாவின் தலையை கோதிவிட்ட படி கேட்டாள் மனைவி
இல்லம்மா ட்ராபிக்-ல வண்டிய ஓட்டிட்டு வர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சிம்மா விலைவாசி உயர்வை கண்டித்து மீட்டிங் போட்ருக்காங்க அதா ரொம்ப டயர்டு ஆகிடுச்சி
 சரி மோகிதா தூங்கிட்டாளா
இப்பதான் பால் குடிச்சிட்டு தூங்குறா
ம்ம்ம்ம் என்னங்க அப்றம் மாமா போன் பன்னிருந்தாங்க
ஊர்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்
இன்னும் ஒருமணி நேரத்துல இங்க வந்துடுவாங்களாம்
ம்ம்ம் சரி
இருவரும் சாப்பிட்டு கண்ணயரும் நேரத்தில் காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்தாள் சிவாவின் மனைவி கழுத்திழுக்க தலைசுமையுடன் உள்ளே வந்தார் சிவாவின் அப்பா, வயது 60வதை கடந்து விட்டதால் பயணகளைப்பு ,தலைசுமை இவற்றால் மயங்கிய நிலையில் இருந்தார் பெரியவர்.
இதை கண்ட சிவா ஆதங்கத்தில் தண்ணீர் எடுத்து வா, என்று மனைவியிடம் சிறிது கடிந்து கொண்டு பெரியவரையும் திட்ட ஆரம்பித்தான்,

வயசான காலத்துல எதுக்கு அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சிகிட்டு
இப்ப இதெல்லா எடுத்துட்டு வரலைன்னு
யார் அழுதா என்று குரலை உயர்த்தி பிடிக்க

தூங்கி கொண்டிருந்த மோகிதா விழித்து கொண்டாள் ....

உங்கப்ப இப்டிதா பேசுவான் நீ வாடா செல்லம் தூங்கிட்டீங்களாக்கும்
தாத்தா.... உங்களுக்கு என்னமெல்லா வாங்கிட்டு வந்திருக்கேன் பாத்தீங்களா நீங்க ஆசையா கேப்பிங்களே கற்கண்டு , சீனிமிட்டாயி
அப்றம்..... அப்றம் .....கருப்பட்டி என்று சிரித்தபடியே
தனது பேத்தியிடம் கொஞ்சி குழைய

இதெல்லாம் சாப்புட்டு குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுதுப்பா
அவ அதெல்லா சாப்பிட மாட்டா என்று சிவா சொல்ல

பெரியவர் மவுனமாய் புன்னகைத்து கொண்டார் அவர் புன்னகையில் ஆயிரம் அர்த்தமுண்டு ஆம் என்ன புரியலையா கற்கண்டும் கருப்பட்டியும் விளையும் பனையை போல தான் இவரும் விவரம் தெரிந்த நாள் முதல் உழைத்த தேகம் இன்றுவரை அதற்கு ஓய்வேயில்லை சரி ஆயிரம் அர்த்தம் கொண்ட பெரியவரின் புன்னகையின் மர்மத்தை பார்ப்போமா ஹஹஹஹ என்ன புரியலையா பனை மரத்த பத்தின சேதி தாங்க அது


நுங்கு


பனங்கிழங்கு

பனம்பழம்

பனங்கற்கண்டு

கருப்பட்டி(எ)பனைவெல்லம்


தவுனு


பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்கு தருவதால் பனையை, கேட்டதை தரும் தேவலோகத்து மரம் என கூறப்படும் கற்பக விருட்சத்தோடு ஒப்பிடுவர். பனைகள் பயிரிடுவதில்லை பாதுகாக்க படுவதுமில்லை அது தானாகவே வளர்கிறது சராசரியா 30 மீட்டர் வரை வளரகூடியது.. பனையிலிருந்து நமது பயன்பாட்டுக்கு ஓலை, நுங்கு, கள்ளு(பதனி), பனங்கிழங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தவுனு என பல கிடைக்கிறது, இவை அத்தனையும் மருத்துவ குணம் கொண்டது, அதுவும் நமது தமிழர்கள் வாழ்வில் பனை பெரும் பங்கு வகிக்கிறது. வள்ளல் பாரியின் பெண்களுக்கு மணமுடிக்க நினைத்த அவ்வையிடம் மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டதாக கதைகளும் உண்டு

திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் அவ்வை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே--என்று நவாலியூர் யாழ்பாண கவிஞர் சோமசுந்தரர் பாடியிருப்பார்

சங்ககால புலவர் ஒருவர் நாரையின் மூக்கை(அலகை)பனங்கிழங்கோடு உவமை படுத்தியிருப்பார்..

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    என்று பாடியிருப்பார்

தேக சூட்டினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் இந்த பனை

இந்த பனையை பற்றி வ.கெளதமன் அவர்கள் இயக்கிய வீடியோவையும் பாருங்களேன்



மூவேந்தர்கள் மழை வெள்ளம் ஊரினில் புகாமலிருக்க ஏரிகரைகளில் அரண் போல பனைகளை நட்டுள்ளனர். இதன் பூவை வெற்றிமாலைகளாகவும் அணிந்துள்ளனர்.

இப்ப புரியுதா அந்த பெரியவரின் மவுன சிரிப்புக்கான அர்த்தம் நமக்கான தடங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம். மருத்துவ குணம் கொண்ட உணவு முறைகளை மறந்து போய் மருந்தையே உணவாக தற்போது உட்கொண்டு வருகிறோம் . வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு அப்டின்னு பழமொழியே உண்டு ....முடிவு உங்கள் கையில்

மேலதிக தகவலுக்கு : http://nganesan.blogspot.in/2011/06/pennai-female-palmyrah-tree.html

உதவியவர்கள் : விக்கிபீடியா

எழுத்துகளும் எண்ண கோர்வைகளும்

***பிரகாஷ் சோனா***





செவ்வாய், 10 ஜனவரி, 2012

தண்ணீர் தேசத்தில் ரசித்த துளிகள்

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை. 

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது
  
முதல் உயிர் பிறந்தது
கடலிலா? நம்புவதெப்படி
நான்?
  
கடலில் பிறந்த முதல் உயிர்
தண்ணீரில்தானே சுவாசித்திருக்க
முடியும். அந்த மரபுரிமையின்
தொடர்ச்சிதான் இன்றும்
கர்ப்பத்தில் வளரும் சிசு
தண்ணீர்க் குடத்தில்
சுவாசிக்கிறது
  
பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.
  
இந்தப் பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள்வீட்டுப் பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் என்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள். பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.
  
எப்போதும் வெப்பம்.
எதிலும்
ஆவேசம். எதையும்
அறிவாகவே
பார்க்கும் அவசரம். இது
தகாது
நீங்கள் புன்னகையைக்
கழற்றிவிட்டுப் போர்வாள்
தரித்திருக்கிறீர்கள்.
போர்தான். அடுத்த
நூற்றாண்டு
யுத்தம்தான். மிருகவாழ்க்கை
மனிதனுக்குத் திரும்பும். வலிமை
உள்ளது மட்டுமே தப்பிக்கும்.
அன்பு - அறம் - எல்லாம்
அன்றில் - அன்னம் பட்டியலில்
காணாமல்போகும்.
அடுத்த நூற்றாண்டில் எவனும்
சைவனாய் இருக்கமாட்டான்.
நரமாமிசம் தின்பான்.
டீக்கடைகளின் மனிதரத்தம்
விற்கும்.

இந்த நூற்றாண்டு மனமும்
உடம்பும்
அடுத்த நூற்றாண்டுக்காகாது.

நகரவாழ்க்கை என்னும் இந்தத்
தார்ப்பாலைவனம் கடக்க
தோல் - தோள் இரண்டும்
தடித்திருக்கவேண்டும்.

இனி வருவது போராளிகளின்
காலம். மனிதர்களோடு
மனிதர்களும் -
எந்திரங்களோடு
எந்திரங்களும்,
தொடர்ந்து யுத்தம்
புரியும் ஒலிகளின் நூற்றாண்டு.

அந்த யுத்தத்திற்குத் தங்களைத்
தயாரித்துக் கொண்டவர்கள்
மட்டுமே ஜீவிதரயிலின் அடுத்த
நூற்றாண்டுப் பெட்டியில் ஏறிக்
கொள்ளலாம். முடியாதவர்கள்
இந்த நூற்றாண்டின்
இறுதியிலேயே
இறங்கிக் கொள்ளலாம்.

வாழ்க்கையின்மீது
நீங்கள்மட்டுமே
நிறைவேற்றிக்கொள்ளும்
அவநம்பிக்கைத் தீர்மானம்
இது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து
உயர்வது உங்கள்
ஒருகரமாய்த்தானிருக்கும்.
இன்னொரு கரம் உயர்ந்தால்
அது உங்கள் இடக்கரமாய்
இருக்கலாம்.

அவ்வளவுக்கு வாழ்க்கை இன்னும்
அழுகிவிடவில்லை. அழுகப்
போவதுமில்லை.

வேட்டையாடுகிற
வேட்டையாடப்
படுகிற இரண்டு இனங்களும்
உயிர்கள் தோனறிய
காலந்தொட்டு
உலவிக்
கொண்டுதானிருக்கின்றன.
ஆனால், சிங்கம்
அழிந்துவிடவுமில்லை. முயல்
முடிந்துவிடவுமில்லை.

வலைகளின் எண்ணிக்கை
அதிகமானதற்காய் மீன்களின்
எண்ணிக்கை
குறைந்துவிடவில்லை.


வசந்தம்-கோடை-மழை-குளிர்-
வெயில்-புயல் என்ற
அனுபவங்கள்
இல்லையேல் எப்போதோ பூமி
இறந்துபோயிருக்கும்.

கல்யாணச் சந்தையில் உன்னைத்
துலக்கிவைப்பதற்கு மட்டுமல்ல
கல்வி.
அனுபவங்களின்பால்
ஆற்றுப்படுத்துவது கல்வி.



கடல் இல்லையென்றால்
வானுக்கு நிறமில்லை. நீ
இல்லையென்றால் என்
வாழ்க்கைக்கு நிறமில்லை.



நீ கடல். நான் பூமி என்பது
வெறும் உவமை
அல்ல. உண்மை.



உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு. 



பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.



உள்ளே எதையும் ஒளிக்காதே.
துணிந்துவிடு. துப்பிவிடு.

ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.
வீரம் வரும்.
ரகசியம் துப்பு. தூக்கம்
வரும்.



இயற்கை தாலாட்டினால்
இந்தக் கடல் இவர்களுக்குத்
தொட்டில்.
இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்
கடல் - கல்லறை.

கரை மீண்டால் இவர்கள்
மீன்தின்னலாம். கரை
மீளாவிட்டால் இவர்களை
மீன்தின்னும்.

வேட்டையாடு. அல்லது
ஆடப்படு.- இதுதான்
இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட
அழியாத வாசகம்.



வாழ்வைக் கற்பனை செய்.
சாவைக் கற்பனை செய்யாதே...

பூக்கள் காற்றில் உதிர்ந்தால் பூகம்பம்
வந்துவிட்டதென்று புலம்பித் திரியாதே.

உச்சிவானத்தில் நிலா வந்தால் தலையில்
விழுந்துவிடுமோ என்று சந்தேகப்படாதே...

இன்பத்தைக் கற்பனை செய்து பார்.
துன்பத்தை எதார்த்தமாய்ப் பார்.

இன்பத்தை இரண்டாய்ப் பார்.
துன்பத்தைப் பாதியாய்ப் பார்...



நிலாவின் வட்டமுகத்தை - வளர்ந்த கொடியின்
வளைவு நெளிவுகளை - புல்லின் மெல்லிய
அதிர்வுகளை - நாணலின் மென்மையை -
பூக்களின் மலர்ச்சியை - மானின் பார்வையை-
உதயசூரியனின் உற்சாகத்தை - மேகத்தின்
கண்ணீரை - காற்றின் அசைவை - முயலின்
அச்சத்தை - மயிலின் கர்வத்தை - தேனின்
இனிமையை - புலியின் கொடுரத்தை -
நெருப்பின் வெம்மையை - பனியின்
தன்மையை - குயிலின் கூவலை - கொக்கின்
வஞ்சகத்தை - கிளியின் இதயத்தை -
சக்கரவாகத்தின் கற்பை ஒட்டுமொத்தமாய்ச்
சேர்த்துப் பெண் படைத்தானாம் பிரம்மன்.



தெரிந்த பூமியைப் பார்க்க மறந்ததும் -
தெரியாத கடவுளைத் தேடி அலைந்ததும்
தான் தமிழன் செய்த தவறு. பசித்தவன்
காதில் வேதாந்தம் ஓதக்கூடாது
என்பார்கள். வேதாந்தம் மட்டுமல்ல.
விஞ்ஞானமும் ஓதக்கூடாது...