புதன், 20 ஜூலை, 2011

தமிழ்... தமிழ்....தமிழ்.....

தூரத்தேச பறவையாய் நம் தமிழினம் !

அந்நியபட்டு கிடக்குது தாயகத்திலேயே,

மீட்கதான் நாதியில்லை-வாழவும்வழியில்லை;

நாகரிகத்தின் முதற்படி தமிழினம்-இது தொல்லியலின் ஆய்வு

அநாகரிகத்தின் முதற்படி எதுவோ?

தமிழின் நிழலில் அந்நிய தேசத்து கயவர்கள்

தமிழன் - கயவர்களின் பிடியில்

விண்ணை பிளந்து கொட்டும் மழைதுளி நாம்

வற்றாத ஜீவநதியும் நாமே தமிழனை அழித்தாலும்

தமிழனின் எச்சமாய் தமிழ்

தமிழைஅழித்தாலும் தமிழின் எச்சமாய் தமிழன்

வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்!

என்றும் உங்கள் தேசத்துப்பிள்ளை
பி ர கா சு

சனி, 16 ஜூலை, 2011

எங்கேசெல்லும் இந்த பாதை...........


சிலநாட்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஊடகங்கள் செய்தியை வெளியிட்டதிலிருந்து நேற்று முன்தினம் வரை அவருக்காக அழாத ரசிகர்களே இல்லை, அவருக்காக சிறப்புபூஜை,பரிகாரம்,வேண்டுதல்கள் இவ்வளவும் செய்தார்களே யாருக்காக எதற்காக எல்லாம் ரஜினி என்ற ஒரு கலைஞனுக்காக,

இவ்வாறு அவர்மீது அன்பு வைக்க என்ன காரணம்? ரஜினி அவர்கள் இவர்களுக்காக என்ன செய்திருக்கிறார்? அது அவர்களது ரசிகர்களுக்குதான்.......இவ்வளவு செய்தும் ரசிகர்களுக்கு மிஞ்சியது போலிஸ் தடியடி,அடிஉதை,எல்லாம் பழக்கபட்டதுதானே கலைஞனை கலைஞனாக பார்க்காமல் உயரியசக்தியாக பார்ப்பது நம்மவர்களிடம் மட்டுந்தான் உண்டு

வேறொன்றுமில்லை அவர்மீது வைத்திருக்கும் அதீத அன்புதான் காரனம் ஒரு பொருளின் மீதோ,ஒரு தனிநபரின்மீதோ..(உறவுகளும் இதில் அடக்கம்)அதீத அன்பு வைத்துவிட்டால் அவற்றை நாம் பிரியவிரும்பமாட்டோம்.ரஜினி அவர்களை பற்றியும் அவரது ரசிகர்களை பற்றியும் நிறைய பதிவர்கள் நிறைய எழுதிவிட்டனர் அவையெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடே யார்மீது? ரசிகர்களின்மீது..எதற்காக அய்யகோ..என் தமிழினம் திசைமாறி செல்கிறதே என்பதற்காக மட்டுமே..
இதற்காக ரஜினி அவர்கள் என்ன செய்ய வேண்டும் ,அவரது பிள்ளைகளுக்கு கடமைபட்டிருக்கிறாரோ இல்லையோ,அவரது ரசிகர்களுக்கு நிச்சயயம்கடமைபட்டிருக்கிரார்.

என்ன கடமை அடுத்து ராணா படத்தில் நடிப்பதா இல்லை ராணா படத்தில் நடிக்கும் முன் உங்கள் ரசிகனை சந்தியுங்கள் கடமைக்கு மன்றதலைவர்களை மட்டும் கூப்பிடாதீர்கள் கடைமட்ட ரசிகனையும் சேர்த்து அழையுங்கள் அவர்களுக்கு காசு பணமெல்லாம் தேவைபடாது குறைந்தபட்சம் அதீத அன்பு யார்மீதும் வைக்காமலிருக்க கற்று கொடுங்கள்

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்உங்களைபோல...............................வாழ்க தமிழ்

புதன், 13 ஜூலை, 2011

 பயணங்கள் முடிவதில்லை

நம் வாழ்கை பயணத்தில் சந்திக்கும் நபர்கள் ஏராளம் அவர்களில் குறிப்பட்ட சிலரை மட்டும் அதிகம் சந்திக்கின்றோம் அவர்கள் தான் தந்தை,தாய், சகோதரன் ,சகோதரி,உற்றார் உறவினர்கள் ,தோழ தோழியர்கள் சூரியனை சுற்றி கோள்கள் தனது சுற்று வட்ட பாதையை அமைத்து கொண்டது போல் நாமும் நம்மை அறிந்தோ அறியாமலோ இந்த நபர்களை சுற்றி அல்லது அவர்கள் நம்மை சுற்றி அமைத்து கொள்கிறோம் (அ) அமைத்து கொள்கிறார்கள் இடையிடையே ஒரு சிலர் வந்து போவர் அவர்களால் நன்மைகள் தான் அதிகம் ஆனால் மீண்டும் அவர்களை சந்திக்கதான் முடியாது மேலே குறிப்பிட்ட நபர்களால் நன்மைகள் உண்டு தீமைகள் குறைவு ஆனால் இன்னல்கள் அதிகம் நாம் வாழ் நாள் முழுவதும் சுமைகளுடனே பயணிக்கிறோம்..............பயணங்கள் தொடர வாழ்துங்கள் எனது பயணம் இனிமையாய்(சுமையாய்) தொடர