வெள்ளி, 25 நவம்பர், 2011

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சம் , ருத்ராட்சத்தை பற்றி பல பதிவுகள் படித்திருப்பீர்கள் ,ருத்ராட்சத்தை பற்றி அறிந்திருப்பீர்கள். ருத்ராட்சம் என்றவுடன் இது ஆன்மீக பதிவு என்று நினைத்து விட வேண்டாம் ,சரி நாம் விடயத்துக்கு வருவோம்.
ருத்ராட்சம் சிவபக்தர்கள் அணிய கூடியது, சைவர்களின் அடையாள சின்னம், ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது ,சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணிய வேண்டும், இதை அணிந்தால் பல விதிகளை கையாள வேண்டும் , என்று பலவாக சொல்லி கேட்டிருப்பீர்கள் .சரி அது அத்தோடு இருக்கட்டும் .பதிவை படித்துவிட்டு நீங்கள் அணிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
 எலீயோகார்பஸ் சொராட்டஸ் (Elaeocarpus serratus)
எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
எலீயோகார்பஸ் கானிட்ரஸ்(Elaeocarpus ganitrus) ஆகியனவாகும்.

                                                               ருத்ராட்ச மரம்
இவை தென் கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகளில் விளைகின்றன. இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது,  25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்பனிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் . இவை அவ்வளவு எளிதாக முளைக்காது ,இதனை பயிர் செய்தால் 1முதல் 2ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது, இதன் இலை 

                                                             ருத்ராட்சப்பழம்  
                                                     
மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே  ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து  ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை

                        *சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
                        *காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
                       *அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)  ஆகியன
ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும்  ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.

ஏழுமுக ருத்ராட்சையின் உள்தோற்றம்
ஒன்பது முக ருத்ராட்சையின் உள்தோற்றம்
              



ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்

இரண்டுமுகம்
   
மூன்றுமுகம்
நான்கு முகம்
ஐந்து முகம்
ஆறுமுகம்
ஏழு முகம்
எட்டு முகம்
ஒன்பது முகம்
பத்து முகம்
பதிநான்கு முகம்

பத்தொன்பது முகம்

த்ரிஜீடி
பதினோரு முகம்
பனிரெண்டு முகம்
பதிமூன்று முகம்
பழத்தினுள் ருத்ராட்ச கொட்டை




இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.

கொசுரு: 17முகம் ருத்ராட்சம்-99ஆயிரமாம்
                  15முகம்--37ஆயிரம்
                  14முகம்--19ஆயிரம்
                  19முகம்--1லட்சத்து 99ஆயிரம்
ஸ்ஸுப்பா இப்பவே கண்ணகட்டுதே நீங்க கவலை படாதீங்க நம்ம 5முகம் 6முகம் 4முகம் இப்டி வாங்கி போட்டுக்கலாம் அதெல்லாம் விலை கம்மி தானாம் 10ரூ முதல் 100ரூ வரை தாம்.ஒருமுகம் கிடைப்பது ரொம்ப அரிதாம்


நன்றி விக்கிபீடியா,ருத்ராட்சம், சிவனின் கண்கள்

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா












வியாழன், 24 நவம்பர், 2011

WHY THIS கொலைவெறி

தலைப்பை பார்த்தவுடனே ஒருமுடிவுக்கு வந்துரிப்பீங்க நான் என்ன சொல்ல போறன்னு நீங்க நினைத்தது சரிதான் நமது தமிழுக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா.. என்னத்த சொல்ல

”கல்தோன்றா மந்தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி” இப்டி பெருமையா வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் இங்க நம்ம ஆளுங்க கிட்ட தமிழ் எப்டியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்குதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். தமிழை நம் முன்னோர்கள் சங்கம் வைத்து வளர்த்தார்கள்  இயல் இசை நாடக கலைகள் மூலம் வள்ர்த்தார்கள் என்று படித்திருப்போம் ஆனால் தற்போதைய நிலை தமிழ்சங்கங்கள் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை கட்சி சங்கங்களும் சாதி சங்கங்கள் மட்டும்  தான் தென்படுகிறது . இயல்,இசை,நாடகம் இன்றும் இருக்கு நைந்து போககூடிய நிலையில் இருக்கு . சினிமாவின் மூலம் கொஞ்சம் அப்பப்ப உசுரோட இருக்கு .

முன்பெல்லாம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது திருவிழாக் காலங்களில் விடிய விடிய புராண கதைகளை மைய படுத்திய கூத்துகள் வீர ம்காராசாக்களை பற்றிய கூத்துகள் நடக்கும் விடிந்ததும் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பாரம்பரிய மேளதாளங்கள் எல்லாம் நடக்கும் இப்படி நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலைகளின் மூலம் கூத்துகாரர்களும் தமிழை வளர்த்தனர்

அந்த கூத்துகள் தான் தற்போது சினிமாவாக உருப்பெற்றுள்ளது தற்போது சினிமா தமிழையும் நம் பாரம்பரியத்தையும் வளர்க்கிறதா என்றால்... அதற்கான பதிலை நான் கூற விரும்பவில்லை உங்களுக்கே தெரியும்

அதற்காக நம்மவர்கள் மீது குறை கூறவில்லை தமிழை நேசிப்பவர்கள் சுவாசிப்பவர்கள் அனேகம் பேர் உண்டு .முதலில் இரண்டு சம்பவங்களை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன்.

சம்பவம் : 1
  எனது பாட்டியின் இறப்பிற்க்காக நான் பிறந்த இருப்பிடத்திற்கு செல்ல நேர்ந்த்து அப்போது பாட்டி பிறந்த வளர்ந்த வாக்கபட்ட அணைத்து கதைகளையும் கூறி கூத்து கட்டினர் அப்படி கூத்து கட்டிய அதே கிராமத்தில் எனது அண்ணன் மகனும் இருக்கிறான் சென்ற இடத்தில் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தேன், அப்போது மகன் என்ன படிக்கிறான் என்று கேட்டேன் அவன் காம்போண்டு ஸ்கூல்ல படிக்கிறான்னு பெருமிதம் பட, மகன் குறுக்கிட்டு அது காம்போண்டு இல்லப்பா கான்வெண்ட் என்று சொல்லி கோபபட்டான் .

சம்பவம் : 2
எனது நண்பனை பார்க்க வேலூருக்கு சென்றிருந்தேன், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டேன், ஒருகுழந்தை 1st std என்றும் மற்றொரு குழந்தை LKG என்றும் புன் முறுவலாய் பதிலளித்தனர் .அவ்வாறு பேசிகொண்டிருக்கையில் மீண்டும் நான் என்ன சாப்பிடுவாய் மீன் சாபிடுவாயா, கறி சாப்பிடுவாயான்னு கேட்டேன் இரண்டும் சாப்பிட மாட்டேன் என்று சொன்னாள் சரி என்ன தா சாப்பிடுவ என்று கேட்டேன்.  ஃபிஸ் ,சிக்கன், எக் என்று சொன்னாள்.

இப்போது சொல்லுங்கள் தமிழ் என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா, சரி அதவிடுங்க அது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விடயம் பெற்றோருக்கான ஆசையும் கூட , சமீபத்தில் உறுமி இசை தகடு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேதனையோடு ஒரு விடயத்தை சொன்னார். கமலஹாசன் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்றும்அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது என்றும் ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.  எதற்காக இப்போது இதை கூறுகிறேன் என்றால் சமீபத்தில் தனுஷ் அவர்களின் 3 படத்திற்கான கானொளியை பார்க்க நேர்ந்தது அதை நீங்களே பாருங்க தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து எப்டி கொலை பண்னிருக்கார்ன்னு இந்த பாட்டுல ஒரு வரி கூட தமிழே கிடையாது ஆனால் இது மூனுங்கற தமிழ் படத்துல வர்ர தமிழ் பாட்டு இதுல இன்னொரு வேதனையான விடயம் சினிமாவில தமிழ் வளர்ப்பது கடினம் என்று வேதனை பட்டவரின் மகளின் முன்னிலையில் தனுஷ் பாடுகிறார் (இதுக்கு தானா அம்மனி 7ம் அறிவுல அந்த கூவு கூவுனிங்ளா அம்மணி) 
இன்னுமொரு விடயம் அந்த படத்தில வரும் புறநானூற்று பாடலை பற்றி சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லி அதில் வரும் இரு களிரை மட்டும் என்னவென்று சொல்லாமல் அறிந்தோர் அறிவாராக தெரிந்தோர் தெரிவாராக என்று சொல்லி கொண்டிருக்கையில் அந்த இரு களிரின் விளக்கம் தெரியாததால் அரங்கில் அணைவரும் அமைதியாய் இருக்க ஒருவர் மட்டும் கைதட்டுகிறார் .அப்போது கவி பேரரசு இந்த வரி அவர் ஒருவருக்காக மட்டும் தான் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதனையோடு சொல்கிறார். அந்தளவுக்கு நாம் தமிழை மறந்து தொலைத்து கிடக்கிறோம் .உடனே உனக்கு தெரியுமா என்று என்னிடம் கேட்டு விடாதீர்கள் தெரியாததால் தான் இந்த பதிவே எழுத நேர்ந்தது இதோ அந்த புறநானூற்று வரிகள்


”அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்…
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்”

இன்னுமொன்றையும் கூறினார் 
 இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்


இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரேன்னா நம் முன்னோர்களின் வீரவாளையும் கலாச்சாரத்தையும் பொருட்காட்சியில வச்சிருக்கிற மாதிரி நமது தாய் மொழியையும் வச்சிராதீங்கன்னு சொல்றேன் கொஞ்சமாவது தமிழை கொல்லாம தமிழ் பேசுங்க தயவுசெய்து,  நம்ம காலையில இருந்து இரவு உறங்க செல்லும் முன் வரை தமிழுடன் கலந்து எத்தனை கலப்பட மொழிகளை பேசியிருப்போம் சற்று சிந்தித்து பாருங்கள்

வாழ்க தமிழ் ! ஓங்குக அதன் புகழ் !

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா