செவ்வாய், 12 நவம்பர், 2013

சுட்ட கதை (உணர்வால்)

ஏக்கத்துடன் உட்கார்ந்திருக்கும் அகிலின் மூளைக்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருக்க நினைவுகள் பல தொலைகிறது சில நினைவுகள் அகிலை எட்டிபிடிக்க முயற்சிக்கிறது.

காலை ஏழு மணியாகியும் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறான் அகிலன்.  முனகலும் அழுகையுமாய் இருந்த அவனது தங்கையை அருகிலிருக்கும் சோபாவில் உட்கார வைத்து விட்டு அம்மா அகிலை எழுப்புகிறாள்.

டேய் அகில்… டேய் எந்திரிடா… டேய்…

என்னம்மா தூக்கத்த டிஸ்ட்ரப் பண்ணிகிட்டு

தங்கச்சிக்கு வயிறு வலிக்கிதாண்டா பிரசவ வலியா இருக்கும்னு நினைக்கிறேன், ’போயி ஆட்டோ கூட்டிட்டு வா’ ஹாஸ்பிட்டலுக்கு போவனும். அகிலும் வேகமாய் எழுந்து தனது உடமைகளை சரிசெய்து கொண்டு வேகமாக ஆட்டோ கூப்பிட கிளம்புகிறான்.

இதற்கிடையில், டாக்டரை பார்க்க போன் மூலம் அப்பாய்ன்மெண்ட் வாங்கி வைத்து விட்டாள் அகிலின் அம்மா,
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததுதான் இன்னும் பலமாய் கதற ஆரம்பித்து விட்டாள் ’கொஞ்சம் பொருத்துக்கம்மா இதோ கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிட்டல் வந்திடும்’ என்று மகளை தேற்றுகிறாள். ஹாஸ்பிட்டல் வந்ததும் தங்கையை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டே அங்குள்ள ரிசப்சன் லேடியிடம் பிரசவ டாக்டர் எப்போ வருவாங்க என அகில் கேட்கிறான். அதற்கு அந்த லேடி பிரசவ டாக்டர் நாலு பேர் இருக்காங்க நீங்க எந்த டாக்டர பாக்கனும், உடனே அகிலின் அம்மா ஏங்க மஞ்சுளா மேடத்தை பாக்கனுங்க ஏற்கனவே அப்பாயின்மெண்ட் வாங்கியாச்சி,

கொஞ்சம் இருங்கம்மா இதோ போன் பண்றேன்.

.ஏம்மா உங்கள செக்கண்ட் ப்ளோருக்கு வரசொல்றாங்க,          

யாராவது ஒருத்தவங்க இங்க வாங்க
பேஸண்ட்டோட பேரு என்ன
கோமதி
வயசு
23

நர்ஸ்… பேஸண்ட்ட வந்து அழைச்சிட்டு போங்க என்று அந்த லேடி சொல்கிறாள்

இதோ இரண்டாவது மாடி வந்தாச்சி, அகிலின் தங்கையை சோதனை செய்து கொண்டிருக்கிறார் டாக்டர், இன்னும் சரியான பிரசவ வலி வரவில்லையென நர்ஸிடம் ஏதேதோ சொல்லிவிட்டு  அகிலையும் அவரது அம்மாவையும் வெளியே இருக்க சொல்லிச் செல்கிறார்.
மணி ஒன்பதாகிவிட்டது அகிலோ அம்மாவை ஹாஸ்பிட்டலிலே இருக்க சொல்லிட்டு காலை உணவு வாங்க சென்றுவிட்டான்.
அம்மாவோ தனது மருமகனுக்கு போன் பண்ணி விஷியத்தை சொல்கிறாள், மருமகனும் உடனே வருவதாக சொல்லி போனை துண்டிகிறார். அவர் கடலூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் சென்னை வர எப்படியும் மாலை ஐந்தாகிவிடும்,
காலை உணவை வாங்கி வந்த அகில் அம்மாவுடன் உணவருந்தி கொண்டிருக்கையில் நர்ஸ் அழைக்கிறாள்

யாரும்மா கோமதி கூட வந்தவங்க
அகிலும் உடனே போய் நான் தாங்க என்கிறான்
கோமதிக்கு நீங்க என்ன வேணும்
அண்ணங்க     
சரி நீங்க உடனே போயி ரிசப்சன்ல இருபதாயிர ரூபா பணங்கட்டிட்டு வாங்க
இதோ போறேங்க, அம்மா ஏற்கனவே சொல்லிருந்தாள் பிரசவத்துக்கு எப்படியும் 30ஆயிரத்துல இருந்து 40ஆயிரம் ஆகும்னு

இப்போ அகிலுக்கு ஒன்னுமே புரியல, அப்பாவும் ஊருல இல்ல அண்ணனும் ஊருல இல்ல அகிலுக்கோ பணம் புரட்டும் அளவுக்கு வெளி வட்டார அணுபவமோ நண்பர்களோ இல்லை, அம்மாவும் அவனை புரிந்து கொண்டு தனது கழுத்து சங்கிலியை அவுத்து தருகிறாள், அகிலுக்கு இப்பபோது தான் மனம் நிம்மதி ஆகிறது பணமும் புரட்டியாகிவிட்டது ரிசப்சனிலும் பணத்தை கட்டிவிட்டான் அகில்

மணி மாலை நான்காகிவிட்டது டாக்டர் அழைத்ததாக நர்ஸ் அழைக்கிறாள்

நீங்க யாரு
பொண்ணோட அம்மா
சரி,அவங்க கணவர் வரலையா
வந்துகிட்டு இருக்கார் மேடம்
உங்க பொண்ணுக்கு தண்ணிகொடம் உடைஞ்சிடுச்சி பாப்பவும் மோஷன் போயிடுச்சி அதனால க்ரிடிக்கல் கண்டிஷன் ஆப்ரேஷன் தான் பண்ணியாகனும் என்ன சொல்றீங்க

நீங்க என்ன செய்யனுமோ செய்யிங்க மேடம்

சரி நர்ஸ் ஒரு பார்ம் குடுப்பாங்க அதுல அவங்க வீட்டுக்காரர கையெழுத்து போட சொல்லுங்க

நர்ஸ்ஸும் பார்ம்மை எடுத்து வருகிறாள்
எங்கம்மா கோமதியோட ஹஸ்பண்ட்
அவரு இன்னும் வரலிங்க வந்துகிட்டு இருக்கார்
சரி நீங்க கையெழுத்து போடுங்க

அகிலின் தங்கையை தியேட்டருக்குள் அழைத்து செல்கிறார்கள்
மணி மாலை ஐந்தாகிவிட்டது அகிலின் அத்தானும் வந்து விட்டார்.
குழந்தையின் அழுகுரல்

என்ன குழந்தையா இருக்கும் எல்லோருக்கு ஒரே ஆவல் அதற்குள் அகிலின் அத்தான் குழந்தை பிறந்த செய்தியை சொல்ல போனை எடுத்து நம்பர் டயல் செய்து கொண்டிருக்கிறார், அகிலும் வேகமாய் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று சாக்லெட் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுக்க, என்ன குழந்த தம்பினு கேட்கிறாங்க அதே போல அகிலின் அத்தனும் எல்லாரிடமும் போனில் விஷியத்தை சொல்ல அவர்களும் என்ன குழந்தைனு கேக்குறாங்க

இப்போ இருவரும் ஒரே குரலின் நர்ஸ்ஸிடன் என்ன குழந்தைங்க என்று கேட்க, உள்ளே இருந்து ஒரு ஆயாம்மா வந்து மகாலட்சுமி பொறந்துருக்கு கண்ணு மகாலட்சுமி பொறந்திருக்கா நான் தான் இதோ…. இப்போ தான் ட்ரஸ்ஸிங் பண்ணிட்டு வந்தேன் அம்புட்டு அழகா இருக்கு போயி பாரு, அம்மா உள்ள தான் இருக்கு என்று சொல்கிறாள்.

அகிலின் அம்மாவும் வெளியே வருகிறாள், மருமகனை அழைக்கிறாள்.
’ஐயா வாங்க குழந்தைய போயி பாருங்க’ என்று சொல்கிறாள் அகிலும் அவனது அத்தானும் உள்ளே சென்று பார்கிறார்கள். அம்மா குழந்தையை தூக்கி அகிலிடம் தருகிறாள். அகிலும் பயந்தவாறே குழந்தையை தூக்கி ரசித்து விட்டு அத்தானிடம் கொடுத்து விட்டான், அளவில்லா சந்தோசம் அவனுக்கு அம்மாவை பார்த்து கேட்கிறான் எங்கம்மா தங்கச்சி

இன்னும் தியேட்டர்ல இருந்து கூட்டிட்டு வரல தனி பெட்டு ஒதுக்கனதுக்கு அப்பறம் கூட்டிட்டு வருவாங்கடா என்கிறாள்
இப்பொது அகில் எல்லோரிடமும் சந்தோசமாய் சொல்கிறான் நான் மாமாவாகிட்டேன்னு சொன்ன அந்த நாட்களின் நினைவு அகிலின் உணர்ச்சியற்ற ஜடத்தை கொஞ்சம் சோதித்து பார்க்கிறது

சோகசிரிப்பொன்றை உதிர்த்த அவனது உதடுகள் ஏதோ சொல்ல நினைக்க மூன்றரை வருட நினைவுகளை கண்ணீர் அழிக்க நினைக்கிறது. அன்று தங்கையின் பிரசவத்திற்கு ஓடியதை விட இன்று தங்கையின் குழந்தைக்கு வேகமாக ஓடி சோர்ந்து போய் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறான், அன்று அவனுக்கு நண்பர்கள் இல்லை அப்பா அண்ணன் வெளியூர் சென்றிருந்தனர், வெளிவட்டார பழக்க வழக்கம் இல்லை ஆனால் இன்று எல்லாமே இருந்தும் ஓடி ஓடி களைத்து, நண்பன் தோளின் மீதும் தந்தையின் தோள்மீதும் மாறி மாறி சாய்ந்து துவண்டு கிடக்கிறான்

விஷகாய்ச்சலால் பாதித்த அந்த குழந்தையை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தும் காப்பாற்ற முடியாது என்று சொன்னதால் துவண்டுகிடக்கிறான்

தங்கை டாக்டரின் காலை பிடித்து மன்றாடுகிறாள் பலனில்லை பிணகிடங்கிற்கு அழைக்கிறார்கள் நிலைகுலைந்து செல்கிறான் அகில்
அகிலின் தாயோ ஒப்பாரியிடுகிறாள் ஆவேசமாய்

போ போயி உன் கடனை கழிச்சிட்டு வா அன்னைக்கி பிஞ்சு குழந்தையா கையில வாங்குன இன்னைக்கி பொனமா வாங்கிட்டு வா போடா போ என்று கதறுகிறாள்

ஹாஸ்பிட்டலே கொஞ்சம் கலங்கிதான் போயிருந்தது இவர்களின் கதறலை பார்த்து

அகில் அழாமல் இருப்பதை பார்த்து இவன் தான் தைரியசாலி என நினைத்தாரோ என்னமோ வார்டுபாய், உயிர் பிரிந்த குழந்தையை வாங்க அகிலை அழைத்து செல்கிறான்

குழந்தையின் சரீரத்தை ஹாஸ்பிட்டல் வேன்லையே ஏத்தி தானும் ஏறிகொண்டு மற்றவர்களை வாடகை வண்டிடியில் ஏற்றிவிட்டான்
அகிலின் முன் கிடத்தியிருக்கும் செல்லத்தை பார்த்ததும் அழுகை முட்டிகொண்டது

ஒருதடவை அவளது அம்மாவுடன் மார்க்கெட் போகும் போது தொலைந்து போனதை சொல்லி அம்மா அடிச்சிட்டாங்க மாமா என்று சொன்ன விஷியத்தை அன்றைய சூழலில் காமெடியாக பாடிய பாடலை அழுது கொண்டே
பச்ச பாவாடை நிஷா பொண்ணு
மார்க்கெட் போறா நிஷா பொண்ணு
மார்கெட் போன நிஷா பொண்ணு கானா போயிட்டா என ஓவென்று அழுகிறான் அகில்

வாழ்க்கையின் அழகான தருணங்கள் வேகமாய் கடந்து விடுகிறது என்று நண்பர் கவிக்கோ. புகழேந்தி சொன்ன வரிகள் அவன் நினைவிற்கு வருகிறது

அவள் உலகை விட்டும் அகலவில்லை அகிலின் மனதை விட்டும் அகலவில்லை இன்றும் தனக்கு தெரிந்தவர்கள் மரணத்தோடு போராடினால் அகில் இவளை உருகி நினைத்தாலே போதும் இவளின் மூச்சு காற்று அவர்களின் மரணத்தை விடுவிக்கும் என்ற நம்பிக்கையோடு இதோ அவளின் நான்காவது பிறந்த நாளை கொண்டாட தயாராகிவிட்டான்

எண்ணங்களும் எழுத்து கோர்வையும்
*****பெருவுடையான்*****

2 கருத்துகள்:

  1. அண்ணா... பாப்பாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. எதுவுமற்ற
    பிரபஞ்சத்தில்
    அவள் எல்லாமுமாக
    மாறிவிட்டால்

    உணர்வால் சுட்டகதை
    அவள் பிறப்பெனக்கு
    உணர்த்திற்று அகிலா...

    முன்காலைப் பொழுதினிலே
    மோகிதமானவள்
    என் புன்முறுவலிட்டுச் சிரிக்கிறாள். கேட்கிறதா உனக்கு...
    எனக்குக் புலப்படுகிறாள்.

    மாமன் உனக்கு
    முத்தங்காட்டி முகைக்கிறாள்

    கொஞ்சல் குரலில்
    உன்னை கேள்விகளால்
    துளைக்கிறாள் அகிலா...
    பதில் சொல்...

    அகிலன்
    என்
    நண்பன்
    அவன் தங்கை மகளுக்கவன்
    தாய்மாமன்...

    எனக்கும்
    அவனுக்குமான
    உரையாடல் இவை என்பதால்
    யாரேனும் குழப்பிக்கொள்ளாதீர்...

    அகிலன்
    வீட்டுத்தளிரவள்
    பச்சைத்தங்கம்
    பெயரிட்டு காதில் துளையிட்டு
    காலுக்கு கொலுசுமிட்டு
    மாரிலும் தோளிலும்
    தூக்கித்திரிந்த மாமன்
    அசந்த நேரம். காலன் முந்திற்றான்...

    கோலங்கொண்ட
    மயில்போலே
    கொஞ்சல் நடை மொழியிடுவாள்
    ஆழிக்கடல் போலே
    அவள் ஆர்ப்பரித்தே
    மொழி கவின்வாள்
    பூவை முகைவிடும் முன்
    பேராசைத் தேவதைகள்
    பேரெழில் மழலையவள்
    பெயர்த்தெடுத்தே கவர்ந்திட்டார்...

    தாவி துடித்திருந்தும்
    தாளைப் பற்றின கரம்
    விலக்கவில்லை..
    தோழன்
    கண்முன்னே தேவதையவள் தெய்வமென்றாகிவிட்டாள்

    எங்கிருந்தாலும்
    எல்லாமுமாய் இருப்பவள் நீ...
    எப்போதும்
    புன்னகயைக்கொடு பூவே
    நீ மலர்ந்திருக்கும் தோட்டம்தனில்...

    முன்பே
    சொன்னதுபோல்
    எதுவுமற்ற பிரம்மத்தில்
    எல்லாமுமாய் ஆனவள் நீ!

    அகிலா... அமைதிப்படு..
    அவள் ஆனந்தமாய்த் தானிருப்பாள்
    அன்பின் தேவதைக்கு
    மரணமென்றெதுவுமில்லை...

    பதிலளிநீக்கு