புதன், 20 ஜூலை, 2011

தமிழ்... தமிழ்....தமிழ்.....

தூரத்தேச பறவையாய் நம் தமிழினம் !

அந்நியபட்டு கிடக்குது தாயகத்திலேயே,

மீட்கதான் நாதியில்லை-வாழவும்வழியில்லை;

நாகரிகத்தின் முதற்படி தமிழினம்-இது தொல்லியலின் ஆய்வு

அநாகரிகத்தின் முதற்படி எதுவோ?

தமிழின் நிழலில் அந்நிய தேசத்து கயவர்கள்

தமிழன் - கயவர்களின் பிடியில்

விண்ணை பிளந்து கொட்டும் மழைதுளி நாம்

வற்றாத ஜீவநதியும் நாமே தமிழனை அழித்தாலும்

தமிழனின் எச்சமாய் தமிழ்

தமிழைஅழித்தாலும் தமிழின் எச்சமாய் தமிழன்

வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்!

என்றும் உங்கள் தேசத்துப்பிள்ளை
பி ர கா சு

1 கருத்து: