சனி, 30 நவம்பர், 2013

சுட்ட கதை (பகுதி நான் மிகுதி புகழேந்தி)

என் சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தமிழை நுகர்ந்து செல்லட்டும், எனது ஒவ்வொரு நா அசைவும் காற்றோடு இசைந்து கால் அரை ஒரு மாத்திரையென தமிழை மட்டுமே அசை போடட்டும், இவைகளை கேட்டு என் செவிகள் இன்புறட்டும். இதோ தமிழுக்கான என் கர்ஜனை எட்டுத் திக்கும் பரவி வளிமண்டலத்தையே கிழித்தெரியட்டும், இனியொரு சீவன் உதயமாகின் அஃது தமிழையே நுகர்ந்து செல்லட்டும், தமிழை மட்டுமே நுகர்ந்து செல்லட்டும். அது அண்டவெளியின் எக்கோளின் உயிரினமாயினும் சரி தமிழாலே இன்புறட்டும், இஃது தமிழின் மீதான செருக்கோ ஐயமோ இல்லை, யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டுமே, 
சரி… கேளீர்.,! யாம் பெற்ற இன்பம் கேளீர், 
சுவைபடு தமிழைக் கண்டு, நிகண்டுகள் சில தந்த வீரமுனியின் தேம்பாவணி சுவைத்ததுண்டோ, தெள்ளமுதாம் தேனூர் முக்கனிச் சுவையாம் கலம்பகம் படித்ததுண்டோ, நந்திக்கலம்பக பாட்டுடைத் தலைவனை அறிந்ததுண்டோ, வனப்பு மிகு தமிழைக் கேட்டு மகிழ வர்மன் அருட்சோதியான கதையும் கேட்டதுண்டோ, 
ம்ம்ம் இன்னும் கேளீர் 
ஈரடி கருப்பொருளாம் வள்ளுவனின் மறை பொருளாம் உலகறிய மொழிபெயர்த்த கதையும் கேட்டதுண்டோ, சிவமும் அன்பும் ஒன்றாகும் அஃதின் உதயம் தென்னாடாகும்.  தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றியின் பொருளுணர்ந்ததுண்டோ

நிற்க.

தமிழ் வாள் உயர்த்தி சமூக அவலங்களை சவலை பிள்ளையாக்கிட துடிக்கும் எழுத்தாளன் தான் இவர் அதனாலேயே சர்ச்சைகளும் பல இவரை சுற்றி திரிவதுண்டு

இதோ பிரபல பத்திரிகைக்கு அவரது பிரத்யேக பேட்டி

தமிழை பற்றியும் சமூக அவலங்களை பற்றியும் கார சாரமா பல பத்திரிக்கைகள்ல எழுதியிருக்கீங்க புரட்சி எழுத்தாளன்னும் உங்கள சொல்றாங்க அத நீங்க எப்டி எடுத்துக்குறீங்க

புரட்சி வித்துகள் அண்ணன் பிரபா சே செய்யாத புரட்சியா தாடியும் மீசைக்காரனும் செய்யாத புரட்சியா நான் செய்திருக்க போறேன்

சர்ச்சைக்குரியவர்னு கூட உங்கள சொல்றாங்களே சென்ற வருடம் இணையத்தில் அதிகம் தேடபட்டவரும் நீங்கள் தான் விமர்சனத்துக்குள்ளானவரும் நீங்க தான்

பேச்சு தொணியில் சற்று வீரியத்தோடு
சமூக அவலங்களெலாம் சர்ச்சைக்கு உட்பட்டவையாதானே இருக்கு நான் அவலங்களை நோக்கி ஓடுவதால் சர்ச்சைகளும் என்னை சூழ்ந்து கொள்கிறது அவலங்களை களைவது நிம்மதியை ஏற்படுத்தும் ஒருவகை இன்பம் தானே

ஆடைகளில்லா வெண்ணிலவே உனை ஆரத்தழுவுவதில் எத்தனை இன்பம் என்று நீங்கள் சொன்ன வரிகள் சமூகத்திற்கு பொருந்தும் தானே

ஹஹஹ சர்ச்சையை கிளப்புவதே நீங்கள் தான் போல்..உண்மை தான் அவல ஆடைகளில்லா சமூக வெண்ணிலாவை தழுவுவது இன்பம் தானே

எழுத்தாளர் தமிழ்பித்தனுக்கும் உங்களுக்குமான கருத்து மோதலை பற்றி

எல்லா எழுத்தாளனுக்கும் உள்ள மோதல் போல தான் இதுவும்

நீங்கள் அவரை காளான் கவிஞன்னு சொன்னதால் அவர் உங்களை வயிற்றில் ஈரம் உலர்ந்து விட்டதால் பிதற்றுவதாக சாடுகிறாரே

ஆமாய்யா ஈரத்துணி கட்டிகிட்டு தான் அலையிறேன் என்னய்யா இது தேனை நக்குபவன் கூழ் குடிப்பவனை குறைபட்டு பார்ப்பது , உழைக்கிறோமையா உழைப்பில் பிழைக்கிறோமையா பிறகென்ன எம்மில் கேடு

உங்கள் போராட்டம் சமூக அக்கறை ஆட்சியின் நிலைப்பாடு எல்லாம் சரி, உங்கள் வீரியத்தை குறைத்து விவேகத்தோடு செயல்பட்டால் சமூக விழிப்புணர்வில் நன்மை பயக்குமே….உங்களது கோபம் தான்…..

போராட்ட குணத்திற்கு வீரியம் விவேகம் கோபம் எல்லாம் உண்டு கெஞ்சிக் கேட்டால் பிச்சை என்பான் அஞ்சி கேட்டால் கோழை என்பான் பின்பு எப்படி இதை நாங்கள் கையாளுவது சொல்லுங்கள் நீங்களே சொல்லுங்கள்…. குறுக்கு வலிக்க உழைத்த கூட்டம் குடிசைகளை விட்டு உயரவுமில்லை, குறுக்கு வழியில் பிழைத்த கூட்டம் கோடிகளை சேர்க்க்க அயரவும் இல்லை இதில் எங்கே நாங்கள் கோபபடாமல் இருக்க முடியும்

உங்களின் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது அஞ்சாதே..! அஃறினையும் அழிவென்றால் அகத்தை முறைத்து காட்டும் என்ற உங்களது வரிகளையும் நாங்கள் மறக்கவில்லை இளையோருக்கான உங்களின் பாதை அவர்களை நல்வழிபடுத்தட்டும், ம்ம்ம் ஓர் எழுத்தாளனால் எல்லா நிகழ்வையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா..? 

அளவளாவிய உணர்வுகள் அனைத்தையும் எழுத்தில் கொண்டு வருவது சவால் தான்

உங்களின் அந்தரங்கத்தில் நுழைவதாய் எண்ண வேண்டாம் உங்கள் காதல் பற்றி…….அதுவும் நாற்பது வயதில்

நீண்ட சிரிப்பொலிக்கு பின்
காதலுக்கேது வயது வலி மறக்கும் காரணிகளை தேடித் தேடி அலுத்துப் போன மூளை செல்களுக்குள் சில நொடிகளில் ஆக்சிஜனை ஏராளமாய் நுழைக்க செய்தவள் நட்பை காதலுக்கு கடன் கேட்டபோது அன்பை தருகிறேன் என்று சொன்ன அவள் எனக்கு ஒரு தாய் போதுமா ஹஹஹ

காதலை இத்தருணத்தில் கொண்டாடும் நீங்கள் ஓரிரு வரிகள் உங்களின் காதலுக்காக

ம்ம்ம்ம்
உன்னிடத்தில் எனக்கும் என்னிடத்தில் உனக்கும் பேசிக் கொள்ள கோடி வார்த்தை இருந்தும் மெளன மட்டும் பிடித்திருக்கிறது உனக்கும் எனக்கும்
நன்றி வணக்கம்

வண்ணத்தில் புகழ் மிளிர நீலமயமாய் காயம் அமிழ்ந்து கிடக்கிறது. உங்கள் காயத்துகான புகழை நீங்களும் மிளிர செய்யுங்கள்
வணக்கம்

கற்பனை + எழுத்தாடல்
பெருவுடையான்



6 கருத்துகள்:

  1. அருமை...

    காதலியை தாயாகவும் பார்க்கும் காதலன் :) awesome

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி அம்மணி காதலன் கணவன் ஆனாலும் மனைவியை தாயாகவே எண்ணுவார் எனது கதாபாத்திரகாரர்

      நீக்கு
  2. எப்பவும் குறைய போறதில்ல அந்த வீரியமும் கோபமும்..... கூடவே காதலும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடவே குன்றா வளமும் நலமும் சேர்த்துக்கோ அம்மணி..............

      நீக்கு
  3. "சமூக அவலங்களெலாம் சர்ச்சைக்கு உட்பட்டவையாதானே இருக்கு"......

    #சர்ச்சைகள் என்றும் தீர்க்கபடாத "அவலங்கலாய்"(இன்னும்) தொடர்ந்த வண்ணமாகவே இருப்பதுதான்..வேதனையின் உச்சம்.

    பதிலளிநீக்கு