வியாழன், 24 நவம்பர், 2011

WHY THIS கொலைவெறி

தலைப்பை பார்த்தவுடனே ஒருமுடிவுக்கு வந்துரிப்பீங்க நான் என்ன சொல்ல போறன்னு நீங்க நினைத்தது சரிதான் நமது தமிழுக்கு வந்த நிலைமைய பார்த்தீங்களா.. என்னத்த சொல்ல

”கல்தோன்றா மந்தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி” இப்டி பெருமையா வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் இங்க நம்ம ஆளுங்க கிட்ட தமிழ் எப்டியெல்லாம் மாட்டிகிட்டு முழிக்குதுன்னு உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான். தமிழை நம் முன்னோர்கள் சங்கம் வைத்து வளர்த்தார்கள்  இயல் இசை நாடக கலைகள் மூலம் வள்ர்த்தார்கள் என்று படித்திருப்போம் ஆனால் தற்போதைய நிலை தமிழ்சங்கங்கள் எங்கு இருக்கின்றது என்றே தெரியவில்லை கட்சி சங்கங்களும் சாதி சங்கங்கள் மட்டும்  தான் தென்படுகிறது . இயல்,இசை,நாடகம் இன்றும் இருக்கு நைந்து போககூடிய நிலையில் இருக்கு . சினிமாவின் மூலம் கொஞ்சம் அப்பப்ப உசுரோட இருக்கு .

முன்பெல்லாம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது திருவிழாக் காலங்களில் விடிய விடிய புராண கதைகளை மைய படுத்திய கூத்துகள் வீர ம்காராசாக்களை பற்றிய கூத்துகள் நடக்கும் விடிந்ததும் கரகாட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் பாரம்பரிய மேளதாளங்கள் எல்லாம் நடக்கும் இப்படி நம் முன்னோர்கள் விட்டு சென்ற கலைகளின் மூலம் கூத்துகாரர்களும் தமிழை வளர்த்தனர்

அந்த கூத்துகள் தான் தற்போது சினிமாவாக உருப்பெற்றுள்ளது தற்போது சினிமா தமிழையும் நம் பாரம்பரியத்தையும் வளர்க்கிறதா என்றால்... அதற்கான பதிலை நான் கூற விரும்பவில்லை உங்களுக்கே தெரியும்

அதற்காக நம்மவர்கள் மீது குறை கூறவில்லை தமிழை நேசிப்பவர்கள் சுவாசிப்பவர்கள் அனேகம் பேர் உண்டு .முதலில் இரண்டு சம்பவங்களை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன்.

சம்பவம் : 1
  எனது பாட்டியின் இறப்பிற்க்காக நான் பிறந்த இருப்பிடத்திற்கு செல்ல நேர்ந்த்து அப்போது பாட்டி பிறந்த வளர்ந்த வாக்கபட்ட அணைத்து கதைகளையும் கூறி கூத்து கட்டினர் அப்படி கூத்து கட்டிய அதே கிராமத்தில் எனது அண்ணன் மகனும் இருக்கிறான் சென்ற இடத்தில் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தேன், அப்போது மகன் என்ன படிக்கிறான் என்று கேட்டேன் அவன் காம்போண்டு ஸ்கூல்ல படிக்கிறான்னு பெருமிதம் பட, மகன் குறுக்கிட்டு அது காம்போண்டு இல்லப்பா கான்வெண்ட் என்று சொல்லி கோபபட்டான் .

சம்பவம் : 2
எனது நண்பனை பார்க்க வேலூருக்கு சென்றிருந்தேன், அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்டேன், ஒருகுழந்தை 1st std என்றும் மற்றொரு குழந்தை LKG என்றும் புன் முறுவலாய் பதிலளித்தனர் .அவ்வாறு பேசிகொண்டிருக்கையில் மீண்டும் நான் என்ன சாப்பிடுவாய் மீன் சாபிடுவாயா, கறி சாப்பிடுவாயான்னு கேட்டேன் இரண்டும் சாப்பிட மாட்டேன் என்று சொன்னாள் சரி என்ன தா சாப்பிடுவ என்று கேட்டேன்.  ஃபிஸ் ,சிக்கன், எக் என்று சொன்னாள்.

இப்போது சொல்லுங்கள் தமிழ் என்ன பாடுபடுகிறது பார்த்தீர்களா, சரி அதவிடுங்க அது ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விடயம் பெற்றோருக்கான ஆசையும் கூட , சமீபத்தில் உறுமி இசை தகடு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேதனையோடு ஒரு விடயத்தை சொன்னார். கமலஹாசன் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்றும்அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது என்றும் ஆனால்
சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.  எதற்காக இப்போது இதை கூறுகிறேன் என்றால் சமீபத்தில் தனுஷ் அவர்களின் 3 படத்திற்கான கானொளியை பார்க்க நேர்ந்தது அதை நீங்களே பாருங்க தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து எப்டி கொலை பண்னிருக்கார்ன்னு இந்த பாட்டுல ஒரு வரி கூட தமிழே கிடையாது ஆனால் இது மூனுங்கற தமிழ் படத்துல வர்ர தமிழ் பாட்டு இதுல இன்னொரு வேதனையான விடயம் சினிமாவில தமிழ் வளர்ப்பது கடினம் என்று வேதனை பட்டவரின் மகளின் முன்னிலையில் தனுஷ் பாடுகிறார் (இதுக்கு தானா அம்மனி 7ம் அறிவுல அந்த கூவு கூவுனிங்ளா அம்மணி) 
இன்னுமொரு விடயம் அந்த படத்தில வரும் புறநானூற்று பாடலை பற்றி சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லி அதில் வரும் இரு களிரை மட்டும் என்னவென்று சொல்லாமல் அறிந்தோர் அறிவாராக தெரிந்தோர் தெரிவாராக என்று சொல்லி கொண்டிருக்கையில் அந்த இரு களிரின் விளக்கம் தெரியாததால் அரங்கில் அணைவரும் அமைதியாய் இருக்க ஒருவர் மட்டும் கைதட்டுகிறார் .அப்போது கவி பேரரசு இந்த வரி அவர் ஒருவருக்காக மட்டும் தான் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று வேதனையோடு சொல்கிறார். அந்தளவுக்கு நாம் தமிழை மறந்து தொலைத்து கிடக்கிறோம் .உடனே உனக்கு தெரியுமா என்று என்னிடம் கேட்டு விடாதீர்கள் தெரியாததால் தான் இந்த பதிவே எழுத நேர்ந்தது இதோ அந்த புறநானூற்று வரிகள்


”அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்…
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்”

இன்னுமொன்றையும் கூறினார் 
 இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன் என்று சொன்னார்


இப்ப முடிவா என்ன சொல்ல வர்ரேன்னா நம் முன்னோர்களின் வீரவாளையும் கலாச்சாரத்தையும் பொருட்காட்சியில வச்சிருக்கிற மாதிரி நமது தாய் மொழியையும் வச்சிராதீங்கன்னு சொல்றேன் கொஞ்சமாவது தமிழை கொல்லாம தமிழ் பேசுங்க தயவுசெய்து,  நம்ம காலையில இருந்து இரவு உறங்க செல்லும் முன் வரை தமிழுடன் கலந்து எத்தனை கலப்பட மொழிகளை பேசியிருப்போம் சற்று சிந்தித்து பாருங்கள்

வாழ்க தமிழ் ! ஓங்குக அதன் புகழ் !

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக