திங்கள், 3 அக்டோபர், 2011

வா ! தோழா வா !

ஆகாசத்துல நடை பழகி

பால்வெளியில் வீதியுலா வரலாம்.!

சூரியனையுருட்டி பந்து விளையாடி

சந்திரனில் களைப்பாறலாம்.!

நவகிரகத்தையும் எடுத்து

தூண்களமைத்து வீடு கட்டி

சொர்க்க வாயிலை திறக்கலாம்..!

கரும்பள்ளத்துல எரிகல்லை வீசி-ஓர்

பேரொளி உருவாக்கலாம்.!

பூமியிலிருந்து வரும் நம்மவர்க்கு

விண்மீன் சமைத்து பரிமாறலாம்...!

புது யுத்தியை கையாளலாம்

வா தோழா வா...!

---பிரகாஷ்சோனா---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக