சனி, 30 ஜூன், 2012

காதலித்துப்பார்....

காதலித்துப்பார் அழகாகும் உன் வாழ்வு
இஃதோர் கவிஞனின் கூற்று
நானு வோர் நாள் காதலிப்பேன்
அவள் விழி வசங்கொண்டு கவி வடிப்பேன்
புசித்த வண்ணம் குருதியூற்று சில்லிடுமரை

இப்போது மட்டுமென்ன
ம்ம்ம்... காதலிக்கிறேன்
இலக்கண மீறா ஓரீர் மூவென நாலசைச்சீர் உடன்
தேமா புளிமா கருவிளங் கூவிளங் காய்கனி யென
சிறப்பானவளை காதலிக்கிறேன்

பன்னிரு உயிரோடு பதினென் மெய்கலந்து
ஆய்தமேந்தியவளை மூவின பகுத்தலோடு
லுகர லிகர ஐகார ஒளகார ஆய்த மகரங்
களேந்தியவளை சிறப்பாய் காதலிக்கிறேன்

அங்கொருவன் நகைக்கிறான்
நகைக்காதே... நகைத்த நொடி
நாக்கறுந்து மனம் குளறிவிடும்
மொழி திரிதல் நாகரீகமென கருதும்
நீ.... நகைக்காதே

உன் ஏளனம் புரிகிறது
தொன்மை பெரிதல்ல வெனவும்
வழக்கொழிந்திடா தொன்மை காத்து
புதுமை நின் திகழ்வதே நன்மொழியென
யாம் அறிவோம்

புதுமை ஏற்பவளே எம் பதுமை
ஓர்முறையேனும் காதலித்துப்பார்
விளங்கும் ; உன் எண்ணம் விலகும்
உதிரத்தில் கலந்த துர்நாளங்களை
துகிலுரித்து... இவளை கோர்த்தெடு
காதலி...... இனி புரியும் - உன் வாழ்வு
உண்மையிலே வளமாகும்

***பிரகாஷ் சோனா***


செவ்வாய், 26 ஜூன், 2012

காதல் + வக்கிரம் + கொலை,

கனமான விசயம் தான், இதை பார்த்த பிறகு எதுவுமே எனக்கு சொல்ல வரல பாதுகாப்பு கொடுக்க பட வேண்டிய பெற்றோரே இப்படி இருந்தால் குழந்தைகளால் என்னதான் செய்ய முடியும், ஒரு தனி மனிதனின் குரூர வக்கர புத்திக்கு எத்தனை குடும்பம் பாதிக்கிறது . இந்த நிகழ்வு மட்டுமல்ல இன்னும் பல நிகழ்வுகள் நம் சமுதாயத்தில் எங்கோ ஓர் மூலையில் நடந்தேரி கொண்டு தான் இருக்கிறது 



இது போன்ற வக்கிர நிகழ்வுக்கு என்ன காரணம்...? சமூகங்கள் இதை தான் நமக்கு கற்பிக்கிறதா இவங்க என்ன சொல்றாங்க பாருங்கள்



திங்கள், 25 ஜூன், 2012

இரண்டும் எட்டும்

இந்தா பக்கத்துல தான் ரெண்டு எட்ல போயிடலாம் அப்டினு பலர் சொல்றத கேட்டிருப்போம்

இந்த ரெண்டுக்கும் எட்டுக்கும் அப்டி என்னதான் தொடர்பு இருக்கு, சம்பந்தமே இல்லாம நடந்து போறதுக்கு எதுக்கு ரெண்டு எட்டுனு சொல்றாங்க இந்த ரெண்டையும் எட்டையும் பத்தி நம் முன்னோர்கள் என்ன தான் சொல்லிருக்காங்க,ஏதோ எனக்கு தெரிஞ்சவரைக்கும் நான் கற்றது வரைக்கும் சொல்றனே. தெரிஞ்சதை சொல்றேனு சொல்றதை விட தெரிஞ்சதை ஒரு குழப்பு குழப்பி தாரேன் நீங்க அப்டியே புடிச்சிக்கோங்க (அட குழப்பி விடறதுக்கும் யாராவது வேணும்ல)

இரண்டு : கண்ணிரண்டு, காலிரண்டு, கையிரண்டு

எட்டு : எண் ஜான் உடலமைப்பு

இந்த எட்டு ஜான் உடம்பை கொண்டு அக்கம் பக்கம் வேடிக்கை பாக்காம கையிரண்டும் வீசி நடந்தா போற தூரம் பக்கம் வந்திடும். அப்டினு வேற யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன். சரி திட்டாதீங்க நான் தான் முதல்லையே சொன்னேல்ல எதையாவது எனக்கு தெரிஞ்சதை குழப்பி தருவேன்னு...நீங்க திட்னாலும் எதோ இதுல உண்மை இருக்குற மாதிரிதான் தெரியுது (அப்பாடா குழப்பியாச்சி)

ஏதாவது ஆன்மீக குருமார்களிடம் இதை பற்றி கேட்டா அது சித்த சன்மார்க்கத்திற்கான வழின்னு மறைபொருள்ல சொல்லுவாங்க அது என்ன சித்த சன்மார்க்கம் ... எட்டு என்ற எண்ணிற்கு தமிழ் எண்களில்  என்றும் இரண்டிற்கு  என்றும் குறிப்பிடுவது உண்டு அடி உச்சி நு அர்த்தமாம் அதாவது உச்சி முதல் பாதம் வரைக்குமான ஓர் விதமான பயிற்சி அப்டினு ஒரு சாராரும் , எண் ஜான் உடலமைப்பை கொண்ட நாம் உலகில் உள்ள இருமைகளுக்கு உட்பட்டு தான் இருக்கிறோம் இவைகளை கடந்து கடை நிலையான வீடு பேறு அடைவது அதாவது இறைவனடி சேர்தலே இந்த இரண்டு எட்டும் அப்டினு மற்றொரு சாராரும் சொல்வாங்க

எது எப்டியோ இத படிச்சிட்டு நீங்க ஒரு முடிவுக்கு வந்துருப்பீங்க

கொசுரு
*********
* எட்டு போல நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நல்லதாம்
* யோக முறைகள் எட்டு (இயமம்,நியமம்,ஆசனம்,பிராணயாமம்,பிரத்தியாகாரம்,தாரணை,தியானம்,சமாதி)
* சங்க இலக்கியத்தில் தொகை நூல்கள் எட்டு (நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிபாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு)
* கணித முறை படி எட்டு இரட்டை எண் ஆகும்
* சித்தி முறைகள் எட்டு (அணிமா,மகிமா,கரிமா,லகிமா,ப்ராப்தி,ப்ரகாம்ய,ஈசத்வம்,வசத்வம்)


பிரகாஷ் சோனா

  




சனி, 16 ஜூன், 2012

ஓம் சாந்தி

வார்த்தையாலிட்ட ..தீ.. எனை
வருத்திவிட்டது-அத்தீ
வீரியம் கொண்டு
விருத்தியாகிவிட்டது

சூதாட்ட சொல் கொண்டு உனை
சுத்திகரிக்க பார்க்கிறாய் -உன்
சாகசம் அறியா என்மனதை
சங்கடபடுத்தி பார்க்கிறாய்

காரணம் வினவ
களவாணியை கண்டதை போல்
கூச்சலிடுகிறாய் எனை
குழப்பத்தில் ஆழ்த்துகிறாய்

பொறுமையிழந்து நிற்கிறேன்
போர்கால சிப்பாய் போல

சமாதனம் அடைய என் மனது
சங்கல்பம் எடுத்து கொண்டது - நீ...
சமரசம் பேசும் வரை
சல்லாபம் வேண்டாமென்று

அடைக்கலம் கேட்டு என்னில் நானே
ஆசுவாச படுத்திகொள்கிறேன்
இருந்தும் முடியவில்லை - உனை
ஈட்டிய மனதுக்குள்
ஈட்டுப்பத்திரமாய் நான்...

சாந்தி...சாந்தி...சாந்தி
சாந்தி...மனமே...சாந்தி


***பிரகாஷ்சோனா***


சனி, 9 ஜூன், 2012

விவாசாய புரட்சி (விவசாய நிலத்தின் புலம்பல்)

தரிசா கிடந்த நான் - வாகனம்
தரிகெட்டு ஓடும் தார் சாலையாகி போனேன்
மகசூல் ஈன்ற என் வயிறும்
பாளம் பாளமா வெடிச்சி பாழா போனேன்
விளை நிலமா இருந்த நான்
ரியல் எஸ்டேட்டுக்கு விலையாகி போனேன்

விவசாய குத்தகைக்கு போன எம்மேல
சாயம் பூசுன மகராசி குத்தவச்சிட்டா மாளிகையா
காணி நிலமும் இப்போ அவளுக்கே காணிக்கையா
நஞ்சையும் புஞ்சையும் நைந்து போச்சு
பட்டறை கழிவால எல்லாம் நஞ்சாகி போச்சு
சாகுபடியும் இப்போ கழிவா போச்சு

நான் இன்னும் மலடு ஆகல - என்
நண்பன் மட்டும் கிழடு ஆகிட்டான் - நீயோ
விஞ்ஞானத்துக்கு கைகூலியாகிட்ட
வசதி வாழ்கைக்கு எனை மறந்தே போயிட்ட
சகதியில நின்னவனும் காணா போயிட்டான்
சகட்டு மேனிக்கு அவன் வீணா போயிட்டான்

வேள்னா கொடைனு சொல்லுவாங்க அதனாலயே
எனக்கு வேளாண்ணு பேரும் வச்சாங்க
யாராவது எனக்கு கொஞ்சம் கொடை தாங்க
அதுவும் பசுமை கொடையா தாங்க - உங்கள
காக்கும் எனக்கு எனது பட்டினி சாவ தடுக்க
மீண்டுமோர் பசுமை புரட்சி கொண்டுவாங்க

களை எடுக்க வந்த காலம் மாறி
களை கூட இல்லாம களையிழந்து நிக்கிறேன்
என்னை கொஞ்சம் கை தூக்கி விடுங்க
விவசாயத்துக்கு ஒரு புரட்சி பண்ணுங்க

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

புதன், 6 ஜூன், 2012

என்னவளே...!


பரீட்சைக்கு
மனப்பாடம் செய்கையில்
உனக்கான வாசனையோடு
கார்மேக கருங்கூந்தலை
என் மீது வீசி சென்றாயடி

நொடி பொழுதில்
மனப்பாடம் செய்த 
வரிகளணைத்தும் உனை 
மனப்பாடம் செய்ய துடிக்குதடி
உனை மனப்பாடம் செய்ய
என் மனதுக்கு கற்று தருவாயா
இல்லை
உனை மணமுடிக்க தான் விரல் 
கொஞ்சம் தருவாயா
ஆணுலகின் ஈர்ப்பு விசை நீதானடி
உன் பாதம் தேடி வந்து விழுந்த
நியூட்டனின் ஆப்பிளும் நான் தானடி
மீண்டுமோர் முறை உன் பார்வை
என் மீது வீசி செல்வாயா
இல்லை
எனை நேசிக்க தான் வருவாயா
ஏதோ மயக்கம் 
ஏனோ தயக்கம் எல்லாம் உன்னாலே
ஏங்குது மனம் தூங்காமல் தன்னாலே
காதல் பயம் 
காதல் ஜுரம் என்னிலே
எல்லாம் உன்னாலே
என்னில் நீயும் வந்திடுவாயா 
காதல் தாகம் தீர்த்திடுவாயா


*************************************************
என்றென்றும் உனக்கானவனாய்
பிரகாஷ் சோனா