சனி, 30 ஜூன், 2012

காதலித்துப்பார்....

காதலித்துப்பார் அழகாகும் உன் வாழ்வு
இஃதோர் கவிஞனின் கூற்று
நானு வோர் நாள் காதலிப்பேன்
அவள் விழி வசங்கொண்டு கவி வடிப்பேன்
புசித்த வண்ணம் குருதியூற்று சில்லிடுமரை

இப்போது மட்டுமென்ன
ம்ம்ம்... காதலிக்கிறேன்
இலக்கண மீறா ஓரீர் மூவென நாலசைச்சீர் உடன்
தேமா புளிமா கருவிளங் கூவிளங் காய்கனி யென
சிறப்பானவளை காதலிக்கிறேன்

பன்னிரு உயிரோடு பதினென் மெய்கலந்து
ஆய்தமேந்தியவளை மூவின பகுத்தலோடு
லுகர லிகர ஐகார ஒளகார ஆய்த மகரங்
களேந்தியவளை சிறப்பாய் காதலிக்கிறேன்

அங்கொருவன் நகைக்கிறான்
நகைக்காதே... நகைத்த நொடி
நாக்கறுந்து மனம் குளறிவிடும்
மொழி திரிதல் நாகரீகமென கருதும்
நீ.... நகைக்காதே

உன் ஏளனம் புரிகிறது
தொன்மை பெரிதல்ல வெனவும்
வழக்கொழிந்திடா தொன்மை காத்து
புதுமை நின் திகழ்வதே நன்மொழியென
யாம் அறிவோம்

புதுமை ஏற்பவளே எம் பதுமை
ஓர்முறையேனும் காதலித்துப்பார்
விளங்கும் ; உன் எண்ணம் விலகும்
உதிரத்தில் கலந்த துர்நாளங்களை
துகிலுரித்து... இவளை கோர்த்தெடு
காதலி...... இனி புரியும் - உன் வாழ்வு
உண்மையிலே வளமாகும்

***பிரகாஷ் சோனா***


1 கருத்து: