சனி, 9 ஜூன், 2012

விவாசாய புரட்சி (விவசாய நிலத்தின் புலம்பல்)

தரிசா கிடந்த நான் - வாகனம்
தரிகெட்டு ஓடும் தார் சாலையாகி போனேன்
மகசூல் ஈன்ற என் வயிறும்
பாளம் பாளமா வெடிச்சி பாழா போனேன்
விளை நிலமா இருந்த நான்
ரியல் எஸ்டேட்டுக்கு விலையாகி போனேன்

விவசாய குத்தகைக்கு போன எம்மேல
சாயம் பூசுன மகராசி குத்தவச்சிட்டா மாளிகையா
காணி நிலமும் இப்போ அவளுக்கே காணிக்கையா
நஞ்சையும் புஞ்சையும் நைந்து போச்சு
பட்டறை கழிவால எல்லாம் நஞ்சாகி போச்சு
சாகுபடியும் இப்போ கழிவா போச்சு

நான் இன்னும் மலடு ஆகல - என்
நண்பன் மட்டும் கிழடு ஆகிட்டான் - நீயோ
விஞ்ஞானத்துக்கு கைகூலியாகிட்ட
வசதி வாழ்கைக்கு எனை மறந்தே போயிட்ட
சகதியில நின்னவனும் காணா போயிட்டான்
சகட்டு மேனிக்கு அவன் வீணா போயிட்டான்

வேள்னா கொடைனு சொல்லுவாங்க அதனாலயே
எனக்கு வேளாண்ணு பேரும் வச்சாங்க
யாராவது எனக்கு கொஞ்சம் கொடை தாங்க
அதுவும் பசுமை கொடையா தாங்க - உங்கள
காக்கும் எனக்கு எனது பட்டினி சாவ தடுக்க
மீண்டுமோர் பசுமை புரட்சி கொண்டுவாங்க

களை எடுக்க வந்த காலம் மாறி
களை கூட இல்லாம களையிழந்து நிக்கிறேன்
என்னை கொஞ்சம் கை தூக்கி விடுங்க
விவசாயத்துக்கு ஒரு புரட்சி பண்ணுங்க

என்றென்றும் உங்கள்
பிரகாஷ் சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக