புதன், 6 ஜூன், 2012

என்னவளே...!


பரீட்சைக்கு
மனப்பாடம் செய்கையில்
உனக்கான வாசனையோடு
கார்மேக கருங்கூந்தலை
என் மீது வீசி சென்றாயடி

நொடி பொழுதில்
மனப்பாடம் செய்த 
வரிகளணைத்தும் உனை 
மனப்பாடம் செய்ய துடிக்குதடி
உனை மனப்பாடம் செய்ய
என் மனதுக்கு கற்று தருவாயா
இல்லை
உனை மணமுடிக்க தான் விரல் 
கொஞ்சம் தருவாயா
ஆணுலகின் ஈர்ப்பு விசை நீதானடி
உன் பாதம் தேடி வந்து விழுந்த
நியூட்டனின் ஆப்பிளும் நான் தானடி
மீண்டுமோர் முறை உன் பார்வை
என் மீது வீசி செல்வாயா
இல்லை
எனை நேசிக்க தான் வருவாயா
ஏதோ மயக்கம் 
ஏனோ தயக்கம் எல்லாம் உன்னாலே
ஏங்குது மனம் தூங்காமல் தன்னாலே
காதல் பயம் 
காதல் ஜுரம் என்னிலே
எல்லாம் உன்னாலே
என்னில் நீயும் வந்திடுவாயா 
காதல் தாகம் தீர்த்திடுவாயா


*************************************************
என்றென்றும் உனக்கானவனாய்
பிரகாஷ் சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக