செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இறைவன் உதயமாகிறான்


கலைக்கண் கொண்டு சிலையொன்று
எம்முன்னோன் செதுக்கினரோ

வழிவந்தோரெலாம் அக்கலை கண்டு வியந்து
கைகூப்பி தொழுதனரோ

கலைதனை தொழிலாய் கொண்டு
தொழிற்தனில் கடவுளை கண்டனரோ
எம்மக்காள் அம்முதல் இறைதனை ஏற்றனரோ

அண்ட வெளியில் காணாத இறையை
அன்பினில் அடைத்தனரோ
இயற்கையில் காணாத இறையின் வனப்பை
சிலையின் அழகில் புகுத்தினரோ

அவ்வழி இல்லையெனில்

விஞ்ஞான மெய்ஞான வியாக்யான
மெலாம் பேசி எம்மக்காள் 
இறைதனை கண்டனரோ

சாதிசமய தீண்டாமைதனை
இரவல் பெற்ற அறிவைகொண்டு
எம்குல மக்காள் எங்ஙன்ம் வகுத்தனரோ
இதில் எங்ஙகனம் இறைதனை படைத்தனரோ

பெருவுடையான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக