சனி, 25 பிப்ரவரி, 2012

பனை (கற்பக விருட்சம்)

சிவாவுக்கு அந்நாளின் இயந்திர வாழ்க்கை முடிவடையும் தருணம் ஆம் வேலைக்கு போய்விட்டு சோர்வாய் வந்து சோபாவில் அமர
என்னங்க இன்னைக்கு ரொம்ப வேலையா என்று சிவாவின் தலையை கோதிவிட்ட படி கேட்டாள் மனைவி
இல்லம்மா ட்ராபிக்-ல வண்டிய ஓட்டிட்டு வர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சிம்மா விலைவாசி உயர்வை கண்டித்து மீட்டிங் போட்ருக்காங்க அதா ரொம்ப டயர்டு ஆகிடுச்சி
 சரி மோகிதா தூங்கிட்டாளா
இப்பதான் பால் குடிச்சிட்டு தூங்குறா
ம்ம்ம்ம் என்னங்க அப்றம் மாமா போன் பன்னிருந்தாங்க
ஊர்ல இருந்து கிளம்பிட்டாங்களாம்
இன்னும் ஒருமணி நேரத்துல இங்க வந்துடுவாங்களாம்
ம்ம்ம் சரி
இருவரும் சாப்பிட்டு கண்ணயரும் நேரத்தில் காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்தாள் சிவாவின் மனைவி கழுத்திழுக்க தலைசுமையுடன் உள்ளே வந்தார் சிவாவின் அப்பா, வயது 60வதை கடந்து விட்டதால் பயணகளைப்பு ,தலைசுமை இவற்றால் மயங்கிய நிலையில் இருந்தார் பெரியவர்.
இதை கண்ட சிவா ஆதங்கத்தில் தண்ணீர் எடுத்து வா, என்று மனைவியிடம் சிறிது கடிந்து கொண்டு பெரியவரையும் திட்ட ஆரம்பித்தான்,

வயசான காலத்துல எதுக்கு அங்கிட்டு இங்கிட்டு அலைஞ்சிகிட்டு
இப்ப இதெல்லா எடுத்துட்டு வரலைன்னு
யார் அழுதா என்று குரலை உயர்த்தி பிடிக்க

தூங்கி கொண்டிருந்த மோகிதா விழித்து கொண்டாள் ....

உங்கப்ப இப்டிதா பேசுவான் நீ வாடா செல்லம் தூங்கிட்டீங்களாக்கும்
தாத்தா.... உங்களுக்கு என்னமெல்லா வாங்கிட்டு வந்திருக்கேன் பாத்தீங்களா நீங்க ஆசையா கேப்பிங்களே கற்கண்டு , சீனிமிட்டாயி
அப்றம்..... அப்றம் .....கருப்பட்டி என்று சிரித்தபடியே
தனது பேத்தியிடம் கொஞ்சி குழைய

இதெல்லாம் சாப்புட்டு குழந்தைக்கு ஏதாவது ஆகிட போகுதுப்பா
அவ அதெல்லா சாப்பிட மாட்டா என்று சிவா சொல்ல

பெரியவர் மவுனமாய் புன்னகைத்து கொண்டார் அவர் புன்னகையில் ஆயிரம் அர்த்தமுண்டு ஆம் என்ன புரியலையா கற்கண்டும் கருப்பட்டியும் விளையும் பனையை போல தான் இவரும் விவரம் தெரிந்த நாள் முதல் உழைத்த தேகம் இன்றுவரை அதற்கு ஓய்வேயில்லை சரி ஆயிரம் அர்த்தம் கொண்ட பெரியவரின் புன்னகையின் மர்மத்தை பார்ப்போமா ஹஹஹஹ என்ன புரியலையா பனை மரத்த பத்தின சேதி தாங்க அது


நுங்கு


பனங்கிழங்கு

பனம்பழம்

பனங்கற்கண்டு

கருப்பட்டி(எ)பனைவெல்லம்


தவுனு


பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்கு தருவதால் பனையை, கேட்டதை தரும் தேவலோகத்து மரம் என கூறப்படும் கற்பக விருட்சத்தோடு ஒப்பிடுவர். பனைகள் பயிரிடுவதில்லை பாதுகாக்க படுவதுமில்லை அது தானாகவே வளர்கிறது சராசரியா 30 மீட்டர் வரை வளரகூடியது.. பனையிலிருந்து நமது பயன்பாட்டுக்கு ஓலை, நுங்கு, கள்ளு(பதனி), பனங்கிழங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, தவுனு என பல கிடைக்கிறது, இவை அத்தனையும் மருத்துவ குணம் கொண்டது, அதுவும் நமது தமிழர்கள் வாழ்வில் பனை பெரும் பங்கு வகிக்கிறது. வள்ளல் பாரியின் பெண்களுக்கு மணமுடிக்க நினைத்த அவ்வையிடம் மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டதாக கதைகளும் உண்டு

திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் அவ்வை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே--என்று நவாலியூர் யாழ்பாண கவிஞர் சோமசுந்தரர் பாடியிருப்பார்

சங்ககால புலவர் ஒருவர் நாரையின் மூக்கை(அலகை)பனங்கிழங்கோடு உவமை படுத்தியிருப்பார்..

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
    என்று பாடியிருப்பார்

தேக சூட்டினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் இந்த பனை

இந்த பனையை பற்றி வ.கெளதமன் அவர்கள் இயக்கிய வீடியோவையும் பாருங்களேன்



மூவேந்தர்கள் மழை வெள்ளம் ஊரினில் புகாமலிருக்க ஏரிகரைகளில் அரண் போல பனைகளை நட்டுள்ளனர். இதன் பூவை வெற்றிமாலைகளாகவும் அணிந்துள்ளனர்.

இப்ப புரியுதா அந்த பெரியவரின் மவுன சிரிப்புக்கான அர்த்தம் நமக்கான தடங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம். மருத்துவ குணம் கொண்ட உணவு முறைகளை மறந்து போய் மருந்தையே உணவாக தற்போது உட்கொண்டு வருகிறோம் . வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு அப்டின்னு பழமொழியே உண்டு ....முடிவு உங்கள் கையில்

மேலதிக தகவலுக்கு : http://nganesan.blogspot.in/2011/06/pennai-female-palmyrah-tree.html

உதவியவர்கள் : விக்கிபீடியா

எழுத்துகளும் எண்ண கோர்வைகளும்

***பிரகாஷ் சோனா***