வியாழன், 8 செப்டம்பர், 2011

புலம்பல்

பஞ்சமெல்லாம் பஞ்சாய் பறந்திட
வஞ்சமில்லா வல்லமை தாராயோ
எண்ணிலடங்கா துயரம் போக்க
ஆசைதனை களைவாயோ

வந்த பசிதீர
வழியேதுமில்லையோ
வாழ்வியலை கற்றதனால்
வாழவும் தகுதியில்லையோ

அதர்மமில்லா தர்மம்
உலகில் ஏதுமில்லை-இதை
குதர்க்கமென்போர்
தர்க்கத்தின் வழியில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக