வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வேண்டாமே நட்பில் ஊடல்

நமக்குள் ஊடல் ஏன் தோழி

ஊடலின் காரணம் ஏதடி தோழி

காதலின் ஊடலால்-மனம்

அழுவது சரி தோழி

நட்பின் ஊடலால்-மனம்

அழுவது ஏன் தோழி

காதலில் ஊடல் நெஞ்சம்

சுகமாகும் தோழி

நட்பில் ஊடல் நெஞ்சம்

ரணமாகும் தோழி

நட்பின் உணர்வை புரிந்துகொள் தோழி

நாளும் நமதாகும் என் தோழி

ஊடலின் வலிமை புரியாதா என் தோழி

இனி ஊடலே வேண்டாம் நமக்குள் தோழி

காயா பழமா சொல்லடி தோழி

நிம்மதியாகட்டும் என் மனம் தோழி



உன் மனம் புரிந்தது என் தோழா

ஊடலின் வலிமை தெரிந்தது என் தோழா

கேட்பார் பேச்சின் விளைவே இது தோழா

நம்மில் இல்லை இனி ஊடல் தோழா

நாளும் வாழ்வோம் இனிதாய் தோழா

நட்பின் வலிமை எடுத்துரைப்போம் வா தோழா



தோழமைக்கில்லை இனி பிரிவினை

சொல்லிலுமில்லை திரிவினை

வள்ளுவன் தந்தான் நட்பின் கருவினை

நாமும் தருவோம் இனிய நட்பினை

காப்போம் நட்பினை;தகர்ப்போம் தீவினை



என்றும் உங்கள் தோழன்

பிரகாஷ்சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக