செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

சீர்மிகு என் தமிழ்தாய்

சிந்தனைகளை

பெற்றெடுத்தவள்

பல கலைகளை

வளர்த்தெடுத்தவள்

வந்த வேதனைகளை

வென்றெடுத்தவள்

வீரமிகு மைந்தர்களுக்கு

உணர்வு பால் ஊட்டியவள்

அடிமுடி காணா - ஆதியும்

அந்தமுமாய் இருப்பவள்

கடல் கடந்தாலும் - அங்கும்

மாறா மணம் வீசுபவள்

சித்தம் தெளிந்தவனை -அவள்

பால் பித்தனாக்கியவள்

அவளே என் தமிழ் தாய்

அவளை என்றும் - என்

நெஞ்சில் குடியமர்த்தி

வாழ்த்தி வணங்குகிறேன்

வாழ்க தமிழ்! ஓங்குக அதன் புகழ்!

என்றும் தமிழின் செல்லபிள்ளை உங்கள் தோழன்

பிரகாஷ்சோனா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக