செவ்வாய், 29 மே, 2012

ஆதி வித்துக்கள்

எண்ணங்களுக்கு தூபம் போட்டு
வண்ண கனவுகளை வளர்க்க வேணாமடா
நல் உள்ளங் கொண்டு வல்லோன் வலியோன்
வாழ்த்திட்டால் போதுமடா

மாய உலகில் சாயமிகு காயத்தை
அகற்றினால் மன காயங்களும் மாயமாகுமடா
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் துச்சமெனகொள்
உன்னில் மகிழ்ச்சியும் தஞ்சமாகுமடா

வன்மமில்லா கன்மங்களோடு
திண்மமாய் வாழ்ந்திட்டால்
அஃதே வாழ்வியலின் உச்சமடா-உனக்கு
வானளாவிய புகழ்ச்சி நிச்சயமடா

கூச்சம் தவிர்த்து பயத்தை போக்கி
சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால் - வாழ்நாள்
போராட்டம் சிறிதேனும் குறையுமடா
 மனம் விரைவில் நிறையுமடா

புத்தியை கிளரி சிந்தையுணர்ந்து
நிதானமாய் கவனித்து எண்ணங்களை
செயல்படுத்தினால் தரணியில்
நிரந்தரமாகும் உன் பவனியடா

இஃது ஆதியில் புகட்டிய வரிகளேயடா -ஆகையின்
அகமறிந்தோன் ஏட்டினையும் சிறிது பாரடா
இதுவே வாழ்வியலின் வித்தென நீயும் கூறடா

 எண்ண எழுத்துகளுடன்
****பிரகாஷ்சோனா****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக